Pages

Saturday, July 30, 2011

பதிவர்கள் மன உலைச்சலில் இருந்து விடுபட

பதிவர்கள் என்ன எழுதுவது என்று யோசித்து அதிக மனஉலைச்சலி்ல் இருப்பது தெரிந்த விஷயம் தான் எனக்காகவும் அவர்களுக்காகவும் சில சிந்தனைகள். 

1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.

எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும். (ஒரு நாளைக்கு ஒரு பதிவு மட்டுமே வெளியிடுங்கள் 2 அல்லது 3 பதிவுகள் வெளியிட்டு மற்றவர்களை மன உளைச்சல் உட்படுத்தாதீர்)

3. உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள். (பிரபலமான இடுகைகள் பக்கம் போனால் நிச்சயம் மன அழுத்தம் உண்டாகும்)

4. உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.
ஒரு வருடத்தில் 5 சிறந்த பதிவுகளையாவது  போட வேண்டும் கடவுளை தினம் வேண்டிக்கொள்ளுங்கள்  விரைவில் நிறைவேறும்

5. தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.
(சுட்ட பதிவு போடுவது கில்மா பதிவு வெளியிடுவது)

6. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. (எல்லா பதிவுகளுக்கும் பாராட்டுக்கள் வரும் என்று எதிர்பார்கக வேண்டாம் சில திட்டுக்களையும் வரும்) இந்த பதிவுக்கு எவ்வளவு வரபோகுதோ  தெரியவில்லை

7. ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். சில நேரம் மெக்கை பதிவை போடுவதாக இருக்கலாம். (இதைபோல)

8. பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை (மெக்கையான பதிவுகளை பற்றி ) அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9. சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள் (ஆமாம் உங்களை பின் தொடரும் பதிவர்களை நினைத்து கொண்டாடுங்கள் பாவம் இந்த சந்தேஷமாவது கிடைக்கட்டும்)

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.
நிறைய ஓட்டுக்கள். பின்னூட்டங்கள் அவரைபோல நமக்கு இல்லையே என்று
பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்
உங்களின் வீண் விமசர்னங்கள் வரவேற்கப்படுகின்றன
நன்றி

13 comments:

Unknown said...

நல்ல கருத்துகளும் நகைச்சுவையும் கலந்த பதிவு!
வாழ்த்துக்கள்! நன்றி!
வாருங்கள் என் வலைபக்கம்
புலவர் சா இராமாநுசம்

RIPHNAS MOHAMED SALIHU said...

நல்ல ஆலோசனைகள்... நாம் பதிவு எழுதுற நோக்கம் என்ன ??? எங்கள நாங்களே திருப்திப்படுத்தவும் சந்தோஷமா வைத்திருக்கவும் தானே... அதுவே மன அழுத்தத்தை கொண்டு வருதுன்னா எதுக்கு எழுதணும்?. ஆனாலும்.. யாரோ ஒருவர் புதிதாக நம்மைப் பின்தொடர்ந்தாலோ, ஒரு நல்ல விமர்சனம் வந்தாலோ, திரட்டிகளில் ஒரு ஓட்டுக் கிடைத்தாலோ, facebook இல் ஒரு like கிடைத்தாலோ அல்லது நம் பக்கம் பலபேரால் பார்க்கப்பட்டாலோ, மனம் ஒரு குழந்தையைப் போல துள்ளிக் குதித்துக் கொள்கிறது. எல்லா உயிருமே ஒரு சின்னப் பாராட்டுக்காக ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கூடல் பாலா said...

நல்ல நல்ல அறிவுரைகள் .....கடைபிடிக்கிறேன் ...

Unknown said...

மன உளைச்சல் வர்ற அளவுக்கு சீரியசா இதை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமே இல்லை! நம்மில் பலர் ஜாலியாகவும், ஒரு ரிலாக்சுக்ககவும் தான் எழுதுவது, படிப்பது எல்லாமே!
ஆகவே எழுதுவோம்! மகிழ்ச்சியாக இருப்போம்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>உங்களின் வீண் விமசர்னங்கள் வரவேற்கப்படுகின்றன

ஹி ஹி ஹி மீ த எஸ் கேப்

கவி அழகன் said...

புதியபயனுள்ள தகவல்

M.R said...

நல்ல கருத்துள்ள தகவல் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி

Unknown said...

நல்லா இருக்கே....follow பண்ண வேண்டியது தான்

Anonymous said...

வணக்கம்

20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு நல்ல கருத்தை விதைத்துள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

உங்களின் வீண் விமசர்னங்கள் வரவேற்கப்படுகின்றன.

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

கோமதி அரசு said...

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.
ஒரு வருடத்தில் 5 சிறந்த பதிவுகளையாவது போட வேண்டும் கடவுளை தினம் வேண்டிக்கொள்ளுங்கள் விரைவில் நிறைவேறும்//

நல்ல அறிவுரை.
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. இன்று வலைச்சரத்தில் மனோ அவர்கள் இந்தபதிவை குறிப்பிட்டு இருந்தார்கள். வாழ்த்துக்கள்.மனோ அவர்களுக்கு நன்றி.

Ranjani Narayanan said...

ஒவ்வொரு பதிவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள். பாராட்டுக்கள்!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஆலோசனைகள்... :)

Post a Comment