Pages

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Saturday, January 28, 2012

தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்

“விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்  தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு மக்களி்ன வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிந்தன இதனால் முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெயலிலதா அவர்களால் தடைசெய்யப்பட்டு இன்றளவும் அமலில் உள்ளது.

ஆனால் மக்களின் ஆசை என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு டி.விக்கள் வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புங்கள் என்று  சொல்வதை நம்பி பல லட்சம்  மக்கள் SMS அனுப்புகிறார்கள் அதில் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம். அவர்கள் தரும் பரிசுத்தொகைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியாது,

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஒடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியை கேட்டு அதற்கான விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் டி.வியில் ஒளிபரப்பானது. அவர்களின் கேள்விக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவே ரூ.5000 பரித்தொகை பெற்றுவிடும் ஆசையில் உடனே ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள முயல்வார்கள் ஆனால் ஒருவருக்கும் சிறிது நேரம் லைன் கிடைக்குது அவர்களின் ரேட்டிங் உயரும்.

ஆனால் நிமிடத்திற்கு ரூ.10 என மக்களின் பணம் கரைந்து கொண்டிருக்கும் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் ரூ. 20 போய்விடும் இந்த ரூ. 20 யில் 14 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீதி கூட கொள்கையடிக்கும் செல்போன் நிறுவனத்திற்கும் சேரும். சுமார் ஒரு லட்சம் போர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்து கொண்டாலும் மொத்த வருமானம் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை உள்ளிட்ட எல்லா செலவும் ரூ.2 லட்சம் மட்டுமே மீதியெல்லாம் கொள்ளை லாபம்.

 இதற்கும் ஒரு படி மேலே போய் மக்களை கோடிஸ்வரன் ஆக்கிடுவோம் என்று  மக்களை ஏமாற்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி நடிகர் என மக்களின் பணத்தை சுரண்ட ஒரு பெரிய பட்டாளம் இறங்விட்டார்கள. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 2sms அனுப்ப வேண்டும். 



தமிழகத்தின் ஏழு கோடி மக்களில்  தினமும் 10 லட்சம் மக்களையாவது பலிகட ஆக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். டி.வி. நியுஸ் பேப்பர். பேஸ்புக். Fm அனைத்திலும் மிகப்பெரிய விளம்பரம் செய்து  ஒருநாளுக்கு SMS மூலம் செல்போன் நிறுவனங்களின் தினமும் வருமானம் 1கோடி. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ரூ. 50 லட்சம் இப்படி 7 நாட்களின் வருமானம் 7 கோடி இது 10லட்சம் பேரின் கணக்குதான் இதுவே தினம் 1கோடி மக்கள் கூட SMS அனுப்புகிறார்களாம் அப்படி என்றால் வருமானம் ????

பரிசு பெரும் அந்த நபர் 10 லட்சமோ 15 லட்சமோ தான் இருக்கும்  இது தவிர விளம்பரம்  போன்றவை மொத்தமாக பார்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 20 கோடி வருமானம் கிடைக்குமாம்.

இப்படி தழிழர்களின் பணத்தை சுரண்டப்படுவதை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை அரசாங்கமும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக எனது சகோதரர் முதல் வாரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் sms அனுப்பி ரூ. 120 இழந்துள்ளார்.  இப்படி பல கோடி மோசடி செய்து இன்னும் அந்தகோடீஸ்வர நிழ்ச்சி இன்னும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

Thursday, January 26, 2012

குடியரசு தினமும் மத்திய அரசின் கஞ்சத்தனமும்

பிரபல தமிழ் நாளிதழில் 11 பக்கத்தில் இன்று குடியரசு தினத்திற்கான மத்திய அரசின் விளம்பரம்

இந்த விளம்பரத்திலுள்ள வாசகம்
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மூவர்ணகொடி நமது சுயமரியதை
இந்த விளம்பரத்தில் நமது தேசிய கொடியின் ஒருவர்ணமும் இல்லை
எவ்வளவு சிக்கனம் இது தான் மக்களுக்காக  அரசு கட்டும் சுயமரியாதை தலைவர்களின் படங்களுடன்  13 பக்கத்தில் அழகிய மல்டி கலருடன் விளம்பரம் செய்ய லட்சங்களில் செலவு செய்யும் மத்திய அரசு மக்களுக்கு இது போதும் என்ற நினைப்பும் மூவர்ணகொடி வாசகம் வேற

அடுத்தாக இந்த பிரபல பத்திரிக்கை கள்ளகாதலை கட்டம் போட்டு கலரில்
கொடுக்கும் இந்த நாளேடு ஏனே மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு சரியாக வேலை செய்கிறது.  அதில் கொடுக்கப்பட்ட வாசகத்திற்காகவாவது
கலரில் அச்சிட்டு இருக்கலாம்? 

 இது தான் பத்திரிக்கை சுதந்திரமோ..........

Tuesday, November 22, 2011

1 இலட்சத்து 1349 கோடி தமிழ்நாட்டின் மொத்த கடன்

55 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நாகரீகமே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிரமத்தில் நடத்த உண்மை சம்பவம்.

சாலை வசதியே இல்லாத ஊர்ஃ அந்த கிராமத்தில் இருந்த ஒரு பண்ணையார் வீட்ல் அவர்கள் குடும்பத்தினர் எங்காவது போய் வர கூண்டு வண்டி வைத்து இருந்தனர்.  அந்த ஊரில் காரை பார்க்காதவர்களே பலர் உண்டு.ஒரு நாள் அந்த பெரியவரின் ஒரு மகன் அந்த காலங்களில் 1944 மாடல் என்று கூறப்பட்ட ஒரு பழையகாரைக் கொண்டு வந்து, அதற்கு மாலை போட்டு பெருமையாக தன்ன தகப்பனார் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார் ஊரே திரண்டு வந்து காரை வேடிக்கை பார்த்தது.ஆனால் பெரியவர் பெருமைப்படவில்லை  வருந்தத்தோடு சொன்னார் நீ வெளியே வட்டிக்கு கடன் வாங்கி இந்த காரை வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறாய் இதில் எனக்கு பெருமை இல்லை வருத்தம் தான். நீ உன் கையில் உள்ள வருமானமத்தில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொண்டு வா உன்னை பெருமையோடு பாராட்டுவேனன் என்றார். கிராம முன்சீப்பாக இருக்கும் உன் அண்ணன் சைக்கிளில் போவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் என் மனதுக்கு உன் காரைப் பார்த்தால் மகிழ்ச்சி வரவில்லையே என்றார் இது தான் ஒவ்வொரு வீடும் நாடும் பின்பற்ற வேண்டிய பொருளாதார தத்துவமாகும்.

வரவுக்கேற்ற வகையில் அரசுகள் செலவுகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும்இந்த நிலையில் தமிழக அரசுக்கு இருக்கும் மொத்த கடன் தொகையை கேட்டால் கடன் பட்டார் நெஞ்சம் கோல கலங்கினான்  என்பார்களே அதே உணர்வு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடியே 21லட்சம் மக்களுக்கும் ஏற்படுகிறது தமிழ்நாட்டின் மொத்த ஒரு லட்சத்தது 1349 கோடி ரூபாய்  ஆகும். கேட்பதற்கு தலை சுற்றுகிறது அல்லவா? இது நம் ஒவ்வொருவர் தலையிலும் சுமத்தப்பட்டுள்ள கடனாகும்.

மற்ற மாநிலங்களின் கடன் எவ்வளவு? என்று பார்த்தால் தான் நாம் எந்த அறவு கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம் என்று புரியும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 10 ஆயிரம் கோடி கட்ட வேண்யிருக்கிறது (ஏமாளியான மக்களின் வரிசுமைகள் ஏற்றிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த ஆடம்பர அரசியல்வாதிகள்)

தமிழ் நாட்டின் இவ்வளவு பெரிய சுமை இப்போது திடீரென்று ஏற்பட்டதில்லை.காலங்கலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வைக்கப்பட்ட பெரிய சுமையாகும்.
மறைந்த நாஞ்சில்  மனோகரன் தான் பேசும் எல்லா கூட்டங்களில் எல்லாம் ஏதாவது ஒரு ஆங்கில பழமொழி கடுமையாக உழை, நிறைய சம்பாதி வீட்டைக்கட்டு, ஒரு கார் வாங்கு, திருமணம் செய்துகொள் இன்பமாக வாழ்க்கையை கழி என்பது தான் நமது மக்களுக்கு உழைக்க வேண்டும் தங்கள் உழைப்பில் ஈட்டிய பணத்தில் பொருட்களை வாங்க வேண்டும் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வு மங்கி ஓசியில் அரசு ஏதாவது கொடுத்தால் போதும் என்ற உணர்வு தளிர்த்துவிட்டது.

அரசியல் கட்சிகளும் இந்த இலவசங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தால் தான் ஓட்டு கிடைக்கும் என்ற உணர்வில் வாரி வாரி வழங்கியது. அரசின் வருமானங்கள் எல்லாம் இலவசங்களுக்கு போய்விட்டது. மற்றும் அரசின் ஆடம்பர விழாங்களும், குளறுபடியான நிர்வாகங்களும். அரசு கட்டிடங்களை
இடிப்பதும் மாற்றுவதும். என பல விளையாட்டுகளை அரசியல்வாதிகள் செய்துவிட்டு ஆட்சி முடிந்ததும் அயல் நாடுகளில் சுற்றுலா என சொகுசு வாழ்கை வாழ்வதும் விலை ஏற்றும் தவிர்கக முடியாது என்ற வார்த்தைகள் ஓட்டு போட்ட மக்களுக்கான பதில். கடன்காரராகும் மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும்

Tuesday, August 30, 2011

உழைப்பால் உயர வேண்டும் தமிழ்நாடு

தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரின் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டிருந்த ஒரு நிதர்சனமான உண்மையை தமிழ் நாட்டின் முதலமைச்சர் சட்டப் பேரவையில் தேவை உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் மட்டுமே இலவச திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் மற்ற அனைவருக்கும் கொடுத்து அவர்களை சோம்பேறி கூட்டமாக்கி விடக்கூடாது. என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார்.

மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிய பல கூட்டங்களில் ஒரு கருத்தை மிக தெளிவாக அவருக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கி இழுத்து கூறுவார். எந்த வேலைக்கும் போகாமல் சொம்பேறியாய் திரிபவர்களை அப்படி கூறுவார்
 வெந்ததையும் வேகாததையும் தின்று விட்டு. வேலை வெட்டி எதற்கும் போகாமல் சத்திரம். சாவடி கண்ட இடத்தில் படுத்து தூங்கிவிட்டு என்ன செய்கிறாய்? என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன் என்பவனெல்லாம் சமுதாயத்தில் இருந்து என்ன பயன்? என்று அவர் கூறியது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உழைப்பின் உன்னதத்தை உணர வைக்கிறது அவ்வளவு ஏன் இன்றைய காலகட்டத்திலும் ஏராளமானவர்களின் வாழும் தெய்வமாகக் கருதப்படும் ஒரு உத்தமர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உழைப்போம் உயர்வோம்! என்பார்.

உழைத்து வாழ்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. உழைத்து ஈட்டிய பணத்தில் விலை கொடுத்து, ஒரு பொருள் வாங்கினால் அது அனுபவிக்கும் போது ஏற்படும் இன்பம் இலவசங்களால் கிடைப்பதில்லை நிலைமை இவ்வாறு இருக்க வாக்காளர்களை கவர கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுக்கத் தொடங்கினர். மக்களும் ஓசியில் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வார்களா? மகிழ்ச்சியோடு வாங்கத் தொடங்கினார்கள். எல்லாமே இலவசமாக கிடைக்கத் தொடங்கியவுடன், மக்களுக்கு உழைக்கும் எண்ணம் மங்கி சோம்பேறித்தனம் தலையெடுத்து மக்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களாகவே பொருட்களை வாங்க முடிகிற தகுதியை வளர்ப்பதற்கு பதிலாக  இப்படி  ஓசிக்கு  எல்லாவற்றையும் கொடுத்து சோம்பேறியாக்குகிறோமே என்று நல்லோர் பலர் கவலைப்பட்டனர்  இதற்கெல்லாம் சரியான பதிலை முதலமைச்சர்  கூறிவிட்டார். சட்டசபையில் பேசும் போது ஏதோ ஒரு பொருளாதாரப் புரட்சியைக் கொண்டு வரப்போவதை கோடிட்டுக் காட்டி விட்டார். ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவிகளையும் இலவசமாக தரவேண்டிய அவசியம் இருக்ககூடாது.

தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. இந்த நிலையை என் வாழ்நாளில் நான் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது அது தான் என்னுடைய இலட்சியம் என்று பேசியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

          தமிழ்நாட்டில்  வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் யார் என்ற கணக்கு சரியாக இல்லை. அரசு இந்த கணக்கை துல்லியமாக எடுக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர், முதியோர்கள் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதில் தவறேயில்லை. ஆனால் உழைப்பதற்கு உடலில் தெம்பு உள்ளவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக உழைத்துப் பிழைக்க வேலையை கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி, சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி. எந்த திட்டமென்றாலும் ஏராளமான வேலைவாய்ப்பை கொடுக்க முடியுமா என்ற நோக்கில் தான் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும்.

நெற்றி வியர்வை சிந்தினாமே முத்து முத்தாக அது நெல் மணியாய் விளைந்திருக்கு கொத்துகொத்தாக என்று உழைப்போம் உயர்வோம் என்ற இத்தகைய தமிழகத்தை காண்பதே அனைவரின் விருப்பமாக இருக்கட்டும்...

Saturday, May 14, 2011

தேர்தல் வெற்றி மக்களுக்கு என்ன லாபம்?

                  தி.மு.க கட்சி பல சாதனைகள் செய்தாலும்மக்களுக்கு மிகுந்த வேதனையையும் அளித்திருக்கிறது என்பது தேர்தலின் படுதோல்வியில் தெரி்ந்துவிட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு இலவசங்கள் அல்ல? சிறந்த மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே உண்மையான முன்னேற்றம் வேண்டும் என்பதே மக்களின் எதி்ர்பார்ப்பு!
 
உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவை என்னும் பெறுவார் என்பதற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் வெற்றி மிகச்சிறந்த நிரூபணம்

ஆட்சி ஏற்கும் அதிமுக அரசு மக்களுக்கு என்ன செய்ய போகிறது. விலைவாசி, மின்வெட்டு, வேலையின்மை, பள்ளிகளில் அதிக கட்டணம், ஊழல் போன்றவற்றை சரிசெய்துமக்களுக்கு  நன்மைசெய்ய போகிறதா? இல்லை தி.மு.க கட்சியின் குறைகளை கூறிகொண்டு இருக்க போகிறதாதெரியவில்லை.
எதுவாகினும் இதற்கு மேல் மக்கள் ஒரு மெழுகு சிலை மட்டுமே! 

முந்தைய அரசு எந்த திட்டங்கள் செய்தாலும் அதை நிறுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு புதிய திட்டங்களை செய்ய முனைவதே ஒரு சிறந்த அரசுக்கான பணி அதை முதலவர் ஜெயலலிதா செய்வர்களா என்பது சந்தேகம் தான்?

புதிய சட்டப்பேரவையை பயன்படுத்தாமல் பழைய தலைமைசெயலகத்தை பயன்படுத்த சீர் செய்ய துவங்கி விட்டார்கள் எதற்கு மாற்றம்.

மக்களுக்காக மனசாட்சியுடனும் எளிமையாகவும் சேவை செய்யும் அரசியல்வாதிகள் என்றுமே மக்கள் மனதில் இருப்பார்கள் ஜெயலலிதா என்ன செய்வர்? 

தேர்தல் வெற்றி மக்களுக்கு லாபம் கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!
மற்றங்களை ஏற்போம்!!

Sunday, April 17, 2011

இளம் சாதனையாளர்

தன்னார்வத்தாலும், தனித்திறமையாலும் ஐடி துறையில் இளம் சி.இ.ஓ (C.E.O) ஆகி 14 வயதில் சாதனை படைத்திருக்கிறார் சுகஸ் இந்தியா இளைஞர்களுக்கு இவர் ஒரு சிறந்த ரோல் மாடல்
        சுகாஸ் கோபிநாத்துக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போதே கணினி என்றால் பிரியம். வீட்டிலோ கணினி கிடையாது மாதந்தோறும் அப்பா  தருகிற 15 ரூபாய்க்கு இன்டர்நெட் சென்டரில் ஒரு மணி நேரம் உட்கார்ந்தாலே காசெல்லாம் தீர்ந்து விடும்.  என்ன செய்வது என யோசித்தான், சுகாஸ் படித்த பெங்களுரு ஏர்போர்ஸ் பள்ளிக்கு மிக அருகில் இருந்தது அந்த இன்டர்நெட் சென்டர். மதியம் 1 மணிக்கு மூடினால் 4 மணிக்கு தான் மீண்டும் திறப்பார் அதன் உரிமையாளர். மதிய உணவு இடைவேளை அவனுடைய பள்ளி 1மணிக்கு முடிந்து விடும் சுகாஸ் நேரடியாக உரிமையாளரைச் சந்தித்தான். 1 மணிக்கு மேல் 4 மணிவரை நான் கடையை பார்த்துக் கொள்கிறேன் சம்பளமே தேவையில்லை ஆனால் எனக்கு ஒரு மணி நேரம் இன்டர்நெட் இலவசமாக கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான் உரிமையாளருக்கு அந்த டீலி்ங் ஓகே.
    இலவசமாக கிடைத்த இன்டர்நெட்ல் கண்டதையும் பார்த்து மனதை வீணடிக்காமல் இணையதளங்கள் எப்படி வடிவமைப்பது என தன்னார்வத்தோடு தேட தொடங்கினான். அதற்கான புத்தகங்களை தேடி படித்தான் அவனே இணையதளங்களையும் வடிவமைக்க தொடங்கினான்.
         இணையத்தின் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய நிறுவனத்திற்கு இணையதளம் ஒன்றை வடிவமைத்து கொடுக்கிறான் அதற்காக அவனுக்கு 100 டாலர் (5000) தருவதாக கூறினார்கள். அப்போது அவனுக்கு வங்கியல் அக்கவுண்ட் கிடையாது. அப்பாவிடம் கூறினான் ஆச்சர்யமாக இருந்தாலும் என்ன வேணா பண்ணிக்கோ படிப்புல கவனம் இருக்கட்டும் என கண்டித்தார். அப்போது சுகாஸ் ஓன்பதாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான்.
     அதைத் தொடர்ந்து தன்னை பிரபலபடுத்திக் கொள்ள www.coolhindustan.com என்ற தளத்தை வடிவமைத்துக் கொண்டான்.தன்னைப் பற்றியும் விவரங்களை வெளியிட்டான். அதைப் பார்த்து எனக்கும் ஒண்ணு பண்ணிக் குடுங்க என்று நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது. சுகாஸ் இப்போது ஒரு பிஸினஸ்மேனாக உணரத் தொடங்கினான்.
    தன் சம்பாத்தியத்தில் 13 வயதில் ஒரு கணினியை வாங்கினான் வீட்டில்பாதி  இன்டர்நெட் சென்டரில் பாதியென கழி்ந்தது பிஸினஸ் வாழ்க்கை. அது நிச்சயமாக அவனுடைய படிப்பை பாதித்தது 10 வகுப்பில் கணிதப்பாடத்தில் தோல்வியடைந்தான் குடும்பத்திலும் பள்ளியிலும் அனைவருக்கும் அதி்ர்ச்சி சுயதொழில் செய்வதை பாவச் செயலாக கருதும் பெங்களுரைச் சேர்ந்த சாதாரண மத்திய தர வர்கக் குடும்பத்தை சேர்ந்தவர் சுகாஸ்.
அம்மா ரெம்ப பயந்துட்டாங்க எங்க ஸ்கூல் பிரின்ஸ்பால் என்னை திட்டினாங்க அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க இனிமே இன்டர்நெட் சென்டருக்கு செல்ல மாட்டேன் என்று.
பிறகு நான்கு மாதம் கம்பெனிக்கு லீவு விட்டுவிட்டு படிப்பு படிப்பு மட்டும் தான் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் பண்ணினேன் என்று கூறுகிறார் சுகாஸ்
மேலும்