Pages

Monday, August 27, 2012

சென்னை பதிவர்கள் மாநாட்டு ஆச்சரியங்கள்


      சென்னையில் வலைப்பதிவுகளின் மாநாடு மிக பிரமாண்டமாக அமைதியான முறையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கிட்டதட்ட 200 வலைப்பதிவர்கள் ஒரு சங்கமித்த ஒரு அற்புதமான சங்கமம் என்று தான் சொல்ல வேண்டும் எந்த ஒரு பகுபாடுகள் இன்றி அனைவரும் அன்பால் ஒருமித்த ஒரு அற்புத பெருவிழாவாக அமைந்தது. இந்த பதிவர்கள் மாநாடு.
மூத்த (முதியவர்களை) வலைப்பதிவளர்களை இளைய பதிவர்கள் வாழ்த்தி அவர்களை கௌரவிக்கும் ஒரு  அற்புத நிகழ்வாக தள்ளாடும் வயதில் தடுமாறாமல் எழுதும் அவர்களி்ன் எழுத்துகளுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் அளிக்கப்பட்டு அவர்களை ஊக்களிக்கப்பட்டது.  இதை விழா தலைமைக்கு அற்புதமாக செய்தது. முகம் தெரியாமல் பழகிய நட்புகள் ஒருவருக்கெருவர் நேரில் சந்தித்து அறிமுகப்படுத்தியும், அன்பை பரிமாறிக் கொண்டதும் நிச்சயம் வலையுலகில் ஒரு புதுமையான நிகழ்வு. வருங்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்க பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாகும்.

Friday, August 24, 2012

பதிவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள என்ன தகுதி????


         கடந்த 4 நாட்களாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் மாநட்டை பற்றிய செய்தி பல வலைதளங்களில் காண முடிகிறது.

பதிவர்கள் மாநாடு என்றால் மிகவும் பிரபலமானவர்களும் பலருக்கு பயனளித்த வலைத்தளத்தின் உரிமையாளர்கள் மட்டுமே கலந்து  
கொள்ள வேண்டும் என்றும் அல்லது வலைதளத்தில் ஏதாவது பதிவு செய்தவர்கள் மட்டும் தான் என்ற நினைத்து கொண்டு இருந்தேன். கலந்து
கொள்ள தகுதி என்ன என்று எந்த பதிவர்களும் கூறவில்லையே என்று  நினைத்துகொண்டு இருந்தேன்.