Pages

Sunday, November 17, 2013

சச்சின் ஒரு சகாப்தம்

சச்சின் இந்த பெயரை இந்த பெயரை எல்லா இந்திய மக்களுக்கும் பிடித்த பெயர் இந்தியர்கள் அனைவரும் இந்த பெயரை ஒரு தடவையாவது தங்கள் வாழ்நாளில சொல்லமா இருந்திக்க மாட்டாங்க!  



கிராமத்துல ஆடு மாடு மெய்த்த எங்களை போன்ற பலரை மட்டையை தூக்கி கிரிக்கெட் ஆட வைத்தது சச்சின் தான் மொத்த இந்தியர்களையும் கிரிக்கெட் பற்றி பேச வைத்தது........ டோனி உட்பட பல இளைஞர்களின் கனவு நாயகனா சச்சின் இருந்தது அவரது தொடர்ந்து சிறப்பாக ஆடிய திறமையும் அவரி்ன் பண்பும் தான் கிரி்க்கெட் கடவுள் என  அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறார்.

நேற்று டிவி அவர் கடைசி உரையை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது என் அம்மா இவரு இதுக்கு மேல விளையாட மாட்டார ரொம்ப நாளா விளையாட்டிகிட்டு இருந்தாரே....  என் போயிருராரு என்று சச்சினின் எந்த சாதானையும் அறியாத சமான்ய மக்களுக்கு கூட சச்சினை பிடிக்கிறது........ பல இளைஞர்களின் ரோல் மாடல் சச்சின் அவருக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் கிரிக்கெட் தான். எவ்வளவு  ஏற்றம் இறக்கம் வந்தாலும் மீண்டும் மீண்டும் அவரை நீருபிப்பார் அவரின் திறமை அத்தகைய திறமை பலரை வியக்க செய்தது பலருக்கு பாடமாகவும் இருந்தது....


      மைதானத்தில் தலை சிறந்த பவுலர்களையொல்லாம் தலைதெரிக்க ஓட வைத்தவர் மைதானத்தில் எந்தவொரு நேரத்திலும் அதிகப்பாடியான கோபமோ.  தரக்குறைவான வார்த்தைகளோ. சண்டையோ அவர் போட்டதாக எந்த 

ஒரு செய்திதளிலும் வந்ததே கிடையாது....  பல நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல். முன்னோடி என  வெஸ்ட் இண்டீஸ் வீரா் லாரா  அதிகப்பாடியாக இவரை புழ்ந்துள்ளார்.... முறைப்பாக விளையாடி வரும் விளையாட்டு வீரரையும் தன் நண்பர்களாக்கிய குணம் சச்சின் உயர்ந்த பண்பு..

      பல பத்திரிக்கையாளர்கள். விமர்சர்கள் என பல வித கேள்வி எழுப்பினாலும் அவர்களுக்கு தன் திறமையான ஆட்டத்தின் மூலமாகவே பதில் கூறினார் எந்த கட்டத்திலும் யாரையும் புண் படுத்து மாதிரி கருத்துக்கள் கூட கூறியது கிடையாது.....

8வது படிக்கும் போது சென்னையில ஆஸ்திரேலியா கூட டெஸ்ட் போட்டி ரேடியவுல தமிழ் வர்ணனை மதியம் சப்பாடு டைம்ல பள்ளி பக்கதுல இருக்கிற நண்பர் வீட்டுக்கு 6 நண்பர்கள் சேர்ந்து வர்ணனை கேட்க போனாம் கடைசி  நாள் இந்திய ஜெயிக்கும் தருவாய் சச்சின் 120 ரன்களுக்கு மேல் அந்த மேச்சில் பள்ளி கூட மணி அடிச்சாச்சு இருந்தாலும் ஜெயிக்கிறத  கேட்டுவிட்டு தான் போனோம் என முடிவாக இருந்தோம் 17 ரன்கள் மட்டும் தான் எடுக்குனோம் சச்சின் வார்னே பந்தில் அவுட் 6 விக்கெட் தான் போயிருந்தது அத்தனைபேரும் அடுத்தது அவுட் 5 ரன்னில் இந்தியா தோற்றது.... பள்ளிக்கு போனால் எங்க சுத்திடு வரிங்க போய் முட்டி பொடுங்கன்னு ஒரு மணி நேரம் முட்டி அது கூட பெரிச தோனல .ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்றுவிட்டதே என சச்சினுக்காக தான் கவலைபட வேண்டி  இருந்தது..... இது போல பல தருணங்கள் பலபேர் சச்சினுக்காக கவலைபட்டிருக்கிறார்கள் அவருடைய ஊழைப்பு சிறப்பாக அணியின் ஸ்கோரை தனி ஆளாக பல ஆட்டங்களில் உயர்தி வருவர் சச்சின் அவுட் என்றால் அவ்வுளவுதான்  இந்திய ஆட்டம் பார்கக வேண்டியதே யில்லை என பல நேரத்தில் இருந்து இருக்கிறது.

         எப்பவும் ஜெயிக்கிற அணியில் உள்ள வீரருக்கு தான் மேன் ஆப் மேட்ச் கொடுக்கப்பாங்க ஆன அதை மாற்றி எழுதியர் சச்சின் தான் இந்தியா தோற்ற பல ஆட்டங்களிலும் மேன் ஆப்மேட்ச பட்டம் வென்றார் ஆனால் அதை  வேண்ட வெறுப்பாக போய் வாங்கி வரும் சச்சின் சச்சின் தான் என்று தோன்ற வைக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா கூட  மேட்ச் 359 ரன் 140க்கு ரன் மேல் எடுத்து ஆடிவந்த சச்சின் 330 ரன்னில் அவுட் மற்ற வீரர்களும்  அடுத்த அவுட் இந்திய அணி தோல்வி  மேன் ஆப் மேட்ச் சச்சின் கண்ணிருடனும் கவலையுடனும் தோற்றுவிட்டோம் என கூறிய சச்சின் நாட்டுக்காக அவரின் அற்பணிப்பிற்காகவே அவருக்காக பல  இதயங்கள் வருத்தப்பட்டது... 

அனைவரையும் பல குழந்தைகள் சச்சின் போல் வருவேன் என கூறிக்கொள்ளும்  சச்சின் உண்மையாகவே குழந்தை குணம் கொண்டவர்தான்.........  சச்சின் என்ற வார்த்தை பலருக்கு வழிகாட்டி பலருக்ககு தன்னம்பிக்கை. ஏதே ஒரு விதத்தில் சச்சினால் ஈர்க்கப்பட்ட ஒவ்வொரு ரசிகனும்  சச்சினை கண்ணீரால் விடை அனுப்பினார்கள்...........   சச்சின் ஒரு சகாப்தம்  

Monday, September 2, 2013

பதிவர்கள் சந்திப்பு - ஒரு சிறப்பு பார்வை



இந்த ஆண்டு வலைப்பதிவர்கள் சந்திப்பு சீரும் சிறப்புமாக நடத்தேறியது.  வலையில் எழுதுவது மட்டுமே தம் பணி என்று இல்லாமல் புத்தக வெளியீடு குறும் படம் என் இந்த வருடம் அசத்தலாக நிகழ்ந்துள்ளது  அனைத்து ஏற்பாடுகளையும் நமது ஏற்பாட்டாளர்கள் குழு அருமையாக நிகழ்ந்தியுள்ளது. 



 கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேக்கா. மதுமதி அவர்களின் பணியும் பாராட்ட தாக்கவையே.

நமது வலை எழுத்தாளர்களான சேட்டைக்காரன். சங்கவி. வீடு திரும்பல் மோகன்குமார். சுரேக்கா. யாமிதாஷா இவர்களது  5 புத்தகங்கள் வெளியீடு  ஒரு அருமையான நிகழ்வு 



அனைவரின் பாராட்டையும் கவனத்தையும்  பெற்ற மதுமதியின் 90டிகிரி குறும்படம் அருமை சமூகத்திற்கு  தேவையான ஒரு அற்புத படைப்பு



வெளியூர்களில் இருந்து பல சிரமங்களிடையே வந்த நம் பதிவர்கள் பாராட்டுக்குரியவர்களே.....

சிறந்த முறையில் உணவுகள்  ஏற்பாடு செய்யபட்டு இருந்தது




அண்ணன் ஜாக்கியுடன் நான்

தமிழ்வாசி பிரகாஷ் உடன் நான்


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வலைத்எழுத்தாளர்களின் வளர்ச்சி  முன்னோக்கி சொல்கிறது அனைவரும் கவனிக்க பட வேண்டியவர்களாக மாறி வருவது ஒரு சிறப்பான முன்னேற்றமே அது மேலும் தொடரும் என்றும் நாம் அனைவரும் நம்புபோம்...........

Saturday, August 31, 2013

தடுமாறும் ஆயாக்கள்



   கடந்த இரண்டு வாரமாக அந்த ஆயா நினைப்பு தான் வரவே காணோம் என்ன ஆயிருக்கும் ஒரு வேளை இப்படியே அப்படியே ஆயிருக்குமோ என மனதில குடைந்து கொண்டு இருந்தது மூன்று வருடமாக தெரியும் வாரத்தில் ஒரு நாள் கண்டிபாக வரும் ஆயா இரண்டு வாரமா காணோம் அதை எங்குன்னு போய் தேட முடியும் இந்த பாட்டி  தனது பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு நாடோடி வாழ்கை முறைதான் ஒரு வழியா நேற்று பொறுமையாக நொண்டி நொண்டி வருது என்ன ஆயா என்னாச்சு இல்லாய்யா விழுந்துட்டான்னு கால்ல பாருன்னு அடிபட்ட இடத்தை காண்பிக்குது இதனால உடம்பு சரியில்லை எழுதிருக்கவே முடியலை சேறு தண்ணி இல்லாம கஷ்டபட்ட ய்யா என்று  சொன்னார். வரும்பொழுது எல்லாம் எங்கள் கடையில் உள்ள எல்லாரையும் விசாரிப்பார்.   அரக்கோணத்துல கோவில்களில் தான் தாங்குவராம் அங்கிருந்து ரெயில் தான் வருவாராம்....  

Thursday, August 1, 2013

காணாமல் போன கிராமத்தின் நிழல்கள்.....


மண் சாலையில்  பயணித்தும் விளையாடியும் வளர்ந்த கால்கள்
இன்று சிமெண்ட் சாலையாக இருந்தும் ஏனோ  
அதில் செல்ல மனிதர்கள் தான் இல்லை.....

நாங்கள் பந்தடித்து வளர்ந்த இந்த தெருவில் பல பெரிசுகளின்
 ஏச்சுகளும் பேச்சுகளும் தான் அதிகம்
ஏனே இன்று அந்த பெரிசுகளும் இல்லை
 யாருமற்று கிடக்கிறது இந்த சாலை..........

மாலை நேரத்தில் கை பம்பில் தண்ணீர் கொண்டு வர  
சொல்லும்  பெண்களுக்கு  எங்களின் பந்தடிகள் பழகிய ஒன்று  
அதில் புத்துார் கட்டும் ஒன்றிரண்டு.......

இன்று பல தண்ணீர் குழாய்கள் இருந்தும்
 தண்ணீர்  பிடிக்க கூட்டம் இல்லை......

எங்களது பல  கார்க் பந்துகள் வீட்டின் ஓட்டை உடைத்தது
  சண்டையிட்டும் பந்தை வாங்க முடியாது.......

இன்று பல வீடுகள் இடிந்தும் வீழுந்தும் கொண்டு இருக்கிறது


ஒவ்வொரு பருவத்திலும் ஒன்பது குழந்தைகளாது இருக்கும் இன்று
ஒரு குழந்தைக்கும் விளையாட யாரும் இல்லை....

ஊர் கூடி பாறையில் நடக்கும் பஞ்சாயத்து  இன்று பாறைமட்டும் 
அனாதையாக  நிற்கிறது பஞ்சாயத்து இல்லாமல்....

மார்கழி மாத பூ கோலங்காளில் நடனம் ஆடும் தெருக்கள் 
எல்லாம் மயானமாய் காட்சியளிக்கிறது.......

பசுமையான இலைகளுடன் நிழல் தரும் மரங்கள் எல்லாம் தன் 
கண்ணீராக இலைகள் உதிர்த்து  சருகுகளுடன் சாக காத்திருக்கிறது...
இந்த மனிதர்களற்ற இந்த கிராமத்தில் ....

தேய்பிறையான கிராமங்கள்
வளர்பிறையான நகரத்தை பார்த்து ஏங்குகிறது 
என்னை அழித்து கொண்டு இருக்கிறாய் என்று.......

ஓடிக்கொண்டே இருக்கிறான் மனிதன் மட்டும் ந(ர)கரத்தில்.....

Wednesday, May 15, 2013

கீரைக்காரி


           இன்னிக்கு காலை எழுந்திருக்கும்போதே எங்க வீட்ல வாசல்ல  என் அம்மா கீரை வாங்கு பெண்ணிடம் 5 நிமிடமாக பேரம் பேசுறாங்க நான் எழுந்து வெளியேபோனேன் பிறகு கீரைக்காரியம்மாவிடம் என் அம்மா காசு கொடுத்து அனுப்பி விட்டார். எங்க வீட்ல மாசத்துல 2 தடவையாச்சு எனக்கும் என் அம்மாவுக்கும்  வாக்குவாதம் நடக்கும். அவங்க கேட்குற காசு கொடுத்து அனுப்பு மா உன் கிட்ட வாங்கு காசு வைத்து ஒன்னும் அவங்க பெரிய வீடு ஒன்றும் கட்ட போவதில்லை தினசரி செலவுக்கே அவங்களுக்கு போதுமானதாக இருக்காது. கீரைகட்டு 15 அல்லது 20 ரூபாய் விற்றால் என்ன அவர்களுக்கு அதிகபட்சம 5 ரூபாய் கிடைக்கும் தெருத்தெருவாய் பாரத்தை தூக்கி அலையுறாங்க அவங்கிட்டயெல்லாம் பேரம் பேசமா கேட்குற காசு கொடும்மா என விளக்கமாக  கூறுவேன் சரி சரி என்று தலையாட்டுவாங்க ஆன அடுத்த தடவை இதே பேரம் போசுற வேலைதான் நடக்கும்.  

Sunday, March 3, 2013

சாரா - ரி்ச்சார்ட் ஒரு உண்மை காதல் கதை


காலைபொழுதின் அழுதத்தை  இரவுகள் நேரத்தில் புத்தகம் மற்றும் இசையின் மூலமாக என்னை புதுப்பித்து கொள்ளவதே என்னுடைய வாடிக்கை  

நேற்றைய இரவில்  fm Radio  சேனல் மாற்றிகொண்டு இருக்கையில் ஒரு சேனலில் ஒரு பெண் அழுதுக்கொண்டே தன்னுடைய காதல் கதையை  அந்த ரேடியோ ஜாக்கியிடம் (லவ் குரு) பகிர்ந்து கொண்டு இருக்கிறாள் அவள் பெயர் சாரா என்றும் அவளுடைய காதல் கணவன் பெயர் ரிச்சர்ட்  என்றும் அவளது உணர்வுபூர்வமான வார்த்தைகள் ஆரம்பிக்கிறது.

சாரா காதல் திருமணம் செய்து 5 மாதத்தில் பிரிவு. பிரிவை தாங்க முடியாத பெரும் துக்கம் அவளது வாழ்வில்.  பெங்களுரை பூர்விகமாக கொண்ட  ஒரு தமிழ்பெண் சிறந்த படிப்பு உயர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் சென்னையில் வேலை ரிச்சர்ட் அவளுடன்  பணிபுரிந்தவன் தன்னுடைய முதல் பார்வையில் அவளின் மீது காதல் கொண்டு தொடர்நது 6 மாதம் அவள் பின்னால் அலைந்து காதலுக்கு கீரின்  சிக்னல். என தன்னுடைய அற்புதமான காதல் கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறாள் சாரா  சிறந்த படிப்பறியுள்ள குடும்ப பிண்ணனி   நிறைவான வாழ்க்கை   காதலை பெற்றோரிடம் தெரிவித்து முதலில் சம்மந்தம்  வாங்கி தன்னை பெண் பார்க்க ரிச்சார்ட் குடும்பத்தை வர  வைத்துள்ளாள் இருவீட்டாரின் சம்மதத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடந்தேறியது.

     மருமகளாய் சென்னையில் ரிச்சார்ட் விட அதிக படிப்பு அதிக சம்பளம் என தன் சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்டவள். அப்புறம் எப்படி  சார 5 வது மாதத்திலே டைவர்ஸ் வரைக்கும் கேட்க.  ஆமாம் லவ் குரு என் மாமியார் தான் எல்லாம் பிரச்சனைகளுக்கும் காரணம். எனக்கு கூட்டு  குடும்ப வாழ்ககை தான் பிடிக்கும் அப்படியே தான் அமைந்தது. இருவரும் அதே இடத்தில் தான் வேலை செய்து கொண்டு இருந்தோம் எனக்கு பல கனவுகள் media பணியற்ற  வேண்டும் என்பது அதற்கான முயற்சியும்  எடுத்தேன் ஆனால் என் மாமியார் இதெல்லாம் எங்க குடும்பத்திற்கு சரிவாரது நீ டி.வி யில் நடிப்பது  குடும்பத்திற்கு நல்லதல்ல என கனவுகளுக்கு  தடை போட்டார்கள். ரிச்சர்ட்டும்  அவர் அம்மாவின்  சொல்லுக்கு மட்டுமே தலையாட்டுகிறார். அவங்க சொன்ன நல்லது தான் சொல்லுவாங்க  கேளுன்னு சொல்லவார். எனக்கு ஒரு புரிதல் இருந்தது வேண்டாம் என்று வி்ட்டு வி்ட்டேன். வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கணவர்  மாமியார் சந்தோஷத்துடன் வாழ கூட ஆசைப்பட்டேன் ஆனால் அதிகப்படியான பிரச்சனைகள் என்னை வேலைக்கு போக வைத்தது  என்னுடைய   சேமிப்பு முழுவதையும்  என் கணவரின் குடும்பத்திற்காக செலவி்ட்டேன் பணம் ஒரு பெரியதாக நான் எப்போதும் நினைத்ததேயில்லை.  பல  தனிப்பட்ட ஆசைகளை கூட தியாகம் செய்தேன்.