Pages

Friday, December 30, 2011

கிராமத்து நிழல்கள் (இந்தியா)

கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள் 1950 

 
பெங்காலி இன மக்கள்

வட இந்தியா கிராமம்

1870 தென்னிந்திய கிராமம்

1880ல் எடுக்கப்பட்ட புகைப்படம்

இருளர் இன மக்கள் 1880

Sunday, December 25, 2011

இந்தியாவில் வேலைசெய்வதற்கான சிறந்த Top 10 நிறுவனங்கள்

பெரும்பலான இந்திய பட்டதாரிகள்  சில  உயர்மட்டநிறுவனங்களில் பணிபுரிவதையே தங்களது கனவாக உள்ளது அத்தகை  இந்திய நிறுவனங்களின் டாப் 10 பட்டியல் உள்ளது.

1. இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ்: தங்கள் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இன்ஃபோசிஸ் போன்ற நாராயண மூர்த்தி வெளியேறுவதும் சில விரைவான மாற்றங்கள் பிறகும் அதிகம் மாறவில்லை. நாங்கள் முதலாளிகள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் குளிர் போர்கள் இருக்கலாம் என்று எனக்கு தெரியாது ஆனால் அது இன்னும் பல பட்டதாரிகள் ஒரு கனவு நிறுவனமாக உள்ளது. அனைத்து நாங்கள் இன்போசிஸ் வைக்க கிடைத்தால் ஒரு மைல்கல்லாகும் தொழில்நுட்பம் வெளியே கடந்து இளநிலை சில வலிமையான உணர்வு இருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்ய பல இளைஞர்களின்  கனவாக உள்ளது

2. டிசிஎஸ்: டிசிஎஸ் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் குறிக்கிறது மேலும் உலகம் முழுவதும் 140 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட 40 + நாடுகளில் தனது அலுவலகங்களை கொண்ட இந்திய உயர்மட்ட உச்சநிலை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ரத்தன் டாடா அதன் நிறுவனர் இருந்து 1,60,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள். இது  பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.

3. கூகிள்: ஒவ்வொரு இணைய பயனர் இந்த தேடல் இயந்திரத்தின் வலிமை பற்றி தெரியும் அதன் பின்னணி பற்றி அல்ல. இந்த நிறுவனம் AdWords, orkut, வீடியோ போன்ற அதன் சகோதரி முயற்சிகளுக்கு பல இணைந்து உலகின் சக்தி வாய்ந்த தேடுபொறி செயல்படுகிறது இது இந்தியாவில் முற்றிலும் அதன் வேர் பரவியது ஆனால் பல இந்திய மாணவர்களுக்கு வேலை செய்ய இன்னும் ஒரு இதயம் பிடித்த நிறுவனமாக இல்லை. பெரும்பாலான நேரம் ஆட்சேர்ப்பு ஒரு consultancy வழியாக செல்கிறது மற்றும் பல பிரஷ்ஷர்கள் இன்னும் கடினமாக போராட வேண்டிய நிலை உள்ளது

4. ஐபிஎம்: அதற்கு மேல் மெட்ரோபாலிட்டன் நகர்களின் அதன் தலைமையகம் போல வேலை செய்ய ஒரு நல்ல வாய்ப்பு இது மற்றொரு பன்னாட்டு நிறுவனம். இந்த வன்பொருள் மென்பொருள் இறுதி தீர்வுகள் இறுதி வழங்கும் ஒரே நிறுவனம் உள்ளது. ஐபிஎம் நீங்கள் நன்கு இருக்கலாம் மற்றும் நிறுவனங்கள் மிக தங்கள் பொருட்களை பயன்படுத்த எந்த சர்வதேச வர்த்தகம் கணினிகளுக்கு குறிக்கிறது.

5. விப்ரோ: தலைமையிலான மற்றும் அஸிம் பிரேம்ஜி நிறுவப்பட்டது ஒரு இந்திய மென்பொருள் நிறுவனம் இந்திய உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். இது பொதுவாக இந்திய மைக்ரோசாப்ட் என குறிப்பிடப்படுகிறது. மென்பொருள் வெற்றி எடுத்து பின்னர் அது பல நுகர்வோர் தயாரிப்புகள் ஈடுபட்டுள்ளது.

6. மைக்ரோசாப்ட்: கூகிள் அதன் வேர்களை தொடங்குவதற்கு முன்பு இந்த நிறுவனம் உலகின் பல மக்கள் மனதில் எப்போதும் இருந்தது. அதன் நிறுவனர் பில் கேட்ஸ் உலகின் பணக்கார நபர் மற்றும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒரு பிஸியாக படம் ஒரு பிரபலமான நபர் உள்ளது. இந்த நிறுவனம் 1990 ல் இந்தியாவில் நுழைந்தது மற்றும் இந்திய பன்னிரண்டு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. மைக்ரோசாப்ட் அதன் இயங்கு பிரபலமானவர் என்பதால் நேரம் இந்தியர்கள் மிக தங்கள் இயக்க அமைப்புகள் பணி மும்முரமாக உள்ளன.

7. அக்செஞ்சர்: இந்த முக்கிய இந்திய நகரங்களில் 8 அதன் நிறுவனங்கள் கொண்ட ஒரு அயர்லாந்து அடிப்படையில் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது நியூயார்க் அமைந்துள்ளது அதன் தலைமையகம் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் மேற்பட்ட 2 லட்சம் ஊழியர்கள் கொண்டிருக்கிறது. இது 120 நாடுகளில் மேலும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் தனது நிறுவனத்தின் கொண்டிருக்கிறது.

8. எல் & டி: எல் & டி லார்சன் & டூப்ரோ இன்போடெக் லிமிடெட் மும்பை தலைமையிடமாக ஒரு இந்திய நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவைகள், பிபிஓ மற்றும் Construction தீர்வுகளை வழங்குகிறது. இது இந்தியாவின் முதல் மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மத்தியில் டாப் 10 இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் வேலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக ஒரு இடம் கிடைத்து விட்டது.

9. ஐசிஐசிஐ வங்கி: கே.வி. காமத் நிறுவப்பட்ட இந்த வங்கி இரண்டாவது மிக பெரிய நிதி 2.533 கிளைகள் ஒரு பிணைய இந்தியாவில் சேவைகள் மற்றும் 19 நாடுகளில் தற்போது உள்ளது. தற்போது இந்த வங்கி இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி போன்ற சாந்தா Kochar தலைமையில் உள்ளது. முழு தொழில் கடன் மற்றும் இந்திய முதலீட்டு கழகம் உள்ள ஐசிஐசிஐ ஒரு தொழில் தொடங்க சில புதிய எம்பிஏ மற்றும் பட்டதாரி வைத்திருப்பவர்கள் என ஒரு சிறந்த வீரர்களின் அணியாக  உள்ளது.

10. ஏர்டெல்: Barathi தொலை சுனில் மிட்டல் நிறுவனர் ஒரு தொலைபேசி கேபிள் வியாபாரி ஒரு நிறுவனம் தனது பயணம் செய்துள்ளது. ஏர்டெல் ஒரு ஜிஎஸ்எம் வழங்குநர் மேற்பட்ட 230 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட 20 நாடுகளில் செயல்படுகிறது. இது உலகின் ஐந்தாவது மிக பெரிய telecome ஆபரேட்டர் மற்றும் இந்தியாவில் 3 வது மிக பெரிய உள்ளது. இது வேலை நல்ல நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையை காண்கிறது.

Tuesday, November 22, 2011

1 இலட்சத்து 1349 கோடி தமிழ்நாட்டின் மொத்த கடன்

55 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நாகரீகமே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிரமத்தில் நடத்த உண்மை சம்பவம்.

சாலை வசதியே இல்லாத ஊர்ஃ அந்த கிராமத்தில் இருந்த ஒரு பண்ணையார் வீட்ல் அவர்கள் குடும்பத்தினர் எங்காவது போய் வர கூண்டு வண்டி வைத்து இருந்தனர்.  அந்த ஊரில் காரை பார்க்காதவர்களே பலர் உண்டு.ஒரு நாள் அந்த பெரியவரின் ஒரு மகன் அந்த காலங்களில் 1944 மாடல் என்று கூறப்பட்ட ஒரு பழையகாரைக் கொண்டு வந்து, அதற்கு மாலை போட்டு பெருமையாக தன்ன தகப்பனார் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார் ஊரே திரண்டு வந்து காரை வேடிக்கை பார்த்தது.ஆனால் பெரியவர் பெருமைப்படவில்லை  வருந்தத்தோடு சொன்னார் நீ வெளியே வட்டிக்கு கடன் வாங்கி இந்த காரை வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறாய் இதில் எனக்கு பெருமை இல்லை வருத்தம் தான். நீ உன் கையில் உள்ள வருமானமத்தில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொண்டு வா உன்னை பெருமையோடு பாராட்டுவேனன் என்றார். கிராம முன்சீப்பாக இருக்கும் உன் அண்ணன் சைக்கிளில் போவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் என் மனதுக்கு உன் காரைப் பார்த்தால் மகிழ்ச்சி வரவில்லையே என்றார் இது தான் ஒவ்வொரு வீடும் நாடும் பின்பற்ற வேண்டிய பொருளாதார தத்துவமாகும்.

வரவுக்கேற்ற வகையில் அரசுகள் செலவுகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும்இந்த நிலையில் தமிழக அரசுக்கு இருக்கும் மொத்த கடன் தொகையை கேட்டால் கடன் பட்டார் நெஞ்சம் கோல கலங்கினான்  என்பார்களே அதே உணர்வு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடியே 21லட்சம் மக்களுக்கும் ஏற்படுகிறது தமிழ்நாட்டின் மொத்த ஒரு லட்சத்தது 1349 கோடி ரூபாய்  ஆகும். கேட்பதற்கு தலை சுற்றுகிறது அல்லவா? இது நம் ஒவ்வொருவர் தலையிலும் சுமத்தப்பட்டுள்ள கடனாகும்.

மற்ற மாநிலங்களின் கடன் எவ்வளவு? என்று பார்த்தால் தான் நாம் எந்த அறவு கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம் என்று புரியும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 10 ஆயிரம் கோடி கட்ட வேண்யிருக்கிறது (ஏமாளியான மக்களின் வரிசுமைகள் ஏற்றிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த ஆடம்பர அரசியல்வாதிகள்)

தமிழ் நாட்டின் இவ்வளவு பெரிய சுமை இப்போது திடீரென்று ஏற்பட்டதில்லை.காலங்கலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வைக்கப்பட்ட பெரிய சுமையாகும்.
மறைந்த நாஞ்சில்  மனோகரன் தான் பேசும் எல்லா கூட்டங்களில் எல்லாம் ஏதாவது ஒரு ஆங்கில பழமொழி கடுமையாக உழை, நிறைய சம்பாதி வீட்டைக்கட்டு, ஒரு கார் வாங்கு, திருமணம் செய்துகொள் இன்பமாக வாழ்க்கையை கழி என்பது தான் நமது மக்களுக்கு உழைக்க வேண்டும் தங்கள் உழைப்பில் ஈட்டிய பணத்தில் பொருட்களை வாங்க வேண்டும் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வு மங்கி ஓசியில் அரசு ஏதாவது கொடுத்தால் போதும் என்ற உணர்வு தளிர்த்துவிட்டது.

அரசியல் கட்சிகளும் இந்த இலவசங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தால் தான் ஓட்டு கிடைக்கும் என்ற உணர்வில் வாரி வாரி வழங்கியது. அரசின் வருமானங்கள் எல்லாம் இலவசங்களுக்கு போய்விட்டது. மற்றும் அரசின் ஆடம்பர விழாங்களும், குளறுபடியான நிர்வாகங்களும். அரசு கட்டிடங்களை
இடிப்பதும் மாற்றுவதும். என பல விளையாட்டுகளை அரசியல்வாதிகள் செய்துவிட்டு ஆட்சி முடிந்ததும் அயல் நாடுகளில் சுற்றுலா என சொகுசு வாழ்கை வாழ்வதும் விலை ஏற்றும் தவிர்கக முடியாது என்ற வார்த்தைகள் ஓட்டு போட்ட மக்களுக்கான பதில். கடன்காரராகும் மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும்

Saturday, October 29, 2011

அரிய புகைப்படம்

1890 ல் மெரினா கடற்கரை சாலை


 சென்னை துறைமுகம் 1910ல்

 சென்னை திருவல்லிகேணி 1910


சென்னை 1915


உறை விற்கும் சென்னை பெண்கள் 1920

குழந்தை தாய்

இருளர் இன மக்கள் மதுரை

Wednesday, October 26, 2011

தீபஒளி பரவட்டும் நம்மில்....................

தீபங்களாய் ஒளிரட்டும் நமது மனங்கள்
புத்தாடை அணிவதும் பட்டாசு வெடிப்பது மட்டுமல்ல தீபாவளி
உறவுகளுடன் பகிரட்டும் அன்பை
இல்லார்க்கும் பகிர்ந்திடுவோம் ஒரு வேளை உணவை
தொலைக்காட்சி பெட்டியில் தொலைவது தவிர்த்து
ஆதரவற்ற குழந்தைகளோடு கொண்டாடிவோம் சில மணி துளிகள்
முதல் பட காட்சிக்காக 500 1000 செலவழித்து ஆடம்பரத்தை
வளர்ப்பதை தவிர்த்து
ஒரு நாளாவது உனது பார்வை மாறட்டும் பிளாட்பார வாசிகள் மீதும்
தீபங்களாய் ஒளிரட்டும் நமது மனங்கள்

Sunday, October 23, 2011

காத்திருப்பின் சுகம்




னக்காக காத்திருக்கும் நாட்கள் 
ன் நினைவுகளை சுமந்து செல்லும் இரவுகள்
ன் நினைவுகளில் பல நாட்களாய் விழித்திருக்கும் கண்கள்
ன் ஒரு சொல் கேட்க பல ஆயிரம் அழைப்புகள்
ன்னை நீ உதாசினபடுத்தும் போதும் தொலைந்து விடாத
 உன் அன்பு
னக்குள் இருக்கும் உணர்வும் உன்னுள் இருந்தும் மறைப்பது
    ஏனோ பெண்ணோ?
பல வருடங்களுக்கு முன் என் அனுமதி இன்றி என்னூள்
    வந்த நீ
நான் இருக்கும் வரை நினைவுகளுடன் என்னூள்
வாழ்ந்து கொண்டிருப்பாய்!
நினைவுகள் நிஜமாகுமா பெண்ணோ?...............

Wednesday, September 14, 2011

18ஆம் நூற்றாண்டின் அரிய புகைப்படங்கள்

நெல்குத்தும் பெண்கள் (சென்னை) 1870

பழங்குழ மக்கள் நீலகிரி 1871
நீலகிரி மலைத்தொடரில்கோத்தகிரியில் உள்ள கோட்டா 
கோவில்கள் மற்றும் அதன் பூசாரி - 1871
தண்ணீர் எடுக்கும் பெண்கள் (மதுரை) 1904)


Tuesday, September 6, 2011

இரண்டு கால்கள் இல்லாத ஒரு தன்னம்பிக்கையின் பக்கம்

ஆஸ்கார் லியோனார்ட் கார்ல் Pistorius  (ஆஸ்கர் பிஸ்டோரியஸ்)
1986 ஆம் ஆண்டு நவம்பர் 22 இல் பிறந்தார் தென்னாப்பிரி்க்காவில் பிறந்த இவர் தென் ஆப்பிரிக்காவின்  "பிளேட் ரன்னர்" மற்றும் "கால்கள் இல்லாத வேகமாக மனிதன்" என்று அழைக்கப்படுபவர்.

இவர்ஒரு இரட்டை ஊனம் கொண்ட இவர் மனதால் இவர் ஒரு தன்னம்பிக்கையாளர். சீத்தா ஃப்ளெக்ஸ்-ஃபூட் கார்பன் ஃபைபர் transtibial என்ற செயற்கை கால்கள் உதவியுடன்   2007 இல் Pistorius  தடகளத்தில் தனது முதல் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டார். ஊனமுற்றேர்களுக்கான பாராலிம்பிக்ஸ் 100, 200 மற்றும் 400 மீட்டர் பந்தயங்களில் மூன்று தங்க பதக்கங்களை வென்றார். பல்வேறு சாதனைகளையும் படைத்தார் அதே ஆண்டு, தடகள கூட்டமைப்பு சர்வதேச கூட்டமைப்பு (IAAF) சக்கரங்கள் அல்லது இது போன்ற ஒரு சாதனத்தை பயன்படுத்த எந்த தொழில்நுட்ப சாதனம் "பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதனால் ஜனவரி 2008 14 IAAF 2008 கோடை ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட அதன் விதிகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில், அவரை தகுதியில்லை தீர்ப்பளித்தது இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி பல்வேறு சோதனைகள், கண்காணிப்புகள் ஆராய்ச்சிகளுக்கிடையே  Pistorius செயற்கை கால்கள் இல்லாமல் இயல்பானவையே அவருடைய சக்தியாலும் தன்னம்பிக்கையால் மட்டுமே அவர் வெற்றிபெருகிறார். என்று நீதி மனறம் தீர்பளித்தது. 


அது மட்டுமல்லாம் அவருடைய இலட்சியமான உடல் தகுதி உள்ளவர்களுடன் போட்டியிட அனுமதி கேட்டு அதிலும் அனுமதிவாங்கினார் 2008 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்று ஒலிம்பிக் பேட்டியில் பங்குபெற முயற்சித்தார் ஆனால் தென் ஆப்பிரிக்கா அரசங்கம் அனுமதி மறுத்து விட்டாது. இருந்தாலும் மனம் தளராமல் பல்வேறு தடகள போட்களில் உடல் தகுதியாளர்ககளுடன்  போட்டியிட்டு பதக்கங்களை குவித்துவருகிறார்.

இப்போது நடைபெறும் சர்வேதச தடகளப்போட்டியில்  400 மீட்டர் பிரிவில் அரை இறுதிவரை வந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் இந்த ப்ளேட் ரன்னர் மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு "ஒரு"  தரமான தகுதி பெற்றார் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தமது குறிக்கோள் என கூறியுள்ளார்.


உங்கள் குறைகளை கண்டு குறைவடைந்துவிடாதீர்கள்
உங்களிடம் உள்ளதை கொண்டு முன்னேறுங்கள்
என்பது இவரது தன்னம்பிக்கை வாசகம்

Sunday, September 4, 2011

மந்திரிகளின் சொத்துவிவரங்கள் ஒரு கண்துடைப்பு

32 கேபினட் மந்திரிகளின் 44 இணை மந்திரிகளின் சொத்து விவரம் அடங்கிய பட்டியலை பிரதமர் அலுவலகம் நேற்று வெளியி்ட்டுள்ளது
முக்கிய மந்திரிகளின் சொத்து விவரம் 
பிரதமர் மன்மோகன் சிங் ரூ 5கோடி
மதிப்பிலான சொத்துக்கள்.
 சண்டிகரில் 90 லட்சம் மதிப்பில் வீடு
டெல்லி குஞ்ச் பகுதியில் ரூ.89 லட்சத்தில் பிளாட்
வங்கியில் வைப்பு தொகை ரூ.2 கோடியே 30 லட்சம் 151 கிராம் தங்க நகைகள்
மருதி 800 கார் மேலும் ஒரு வங்கியில் 11 லட்சம் பணம்
நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ரூ.3 கோடி
அதி்ல் மனைவி பெயரில் சுமார் 2 கோடி சொத்துகள்
கொல்கத்தாவில் 2 வீடுகள் விவசாய நிலங்கள்
போர்டு ஐகான் கார். அம்பாசிடர் கார்
ஏழை மந்திரி ஏ.கே. அந்தோணி
கேரள முன்னாள் முதல் மந்திரியான இவருக்கு வங்கி சேமிப்பு கணக்கில்
ரூ. 1லட்சத்து 82 ஆயிரம் மேலும் ஒரு வங்கியில் 20 ஆயிரமும் உள்ளது.
மனைவி பெயரில் 15 லட்சம் மதிப்பில் ஒரு வீடு. 5 சென்ட் நிலமும் 25 பவுன் நகை வேகன் கார் அதே நேரத்தில்   1லட்சத்து 36 ஆயிரம் வங்கியில் கடன் உள்ளது.
ப.. சிதம்பரம் 12 கோடி சொத்துக்கள்
குடகு மலையில் 28 லட்சம்  மதிப்பதில் காபி எஸ்டேட்
80 லட்சத்தில் சென்னையில் வீடு 24 லட்சம் மதி்ப்பில் கார்
சரத் பவாருக்கு 13 கோடி 
புனே நகரில் 2 கோடி மதிப்பில் வீடு 96 லட்சம் மதிப்பில் குடியிருப்பு
மராட்டிய மாநிலத்தில் இரண்டு வீடு
பணக்கார மந்திரி கமல்நாத் ரூ. 263 கோடி
மு.க அழகிரி மற்றும் கபில் சிபில் ரூ. 30 சொத்துக்கள்

      இந்த கணக்கை முழுவதும் உண்மையான நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை இவர்களின் சுவீஸ் வங்கி கணக்குகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்

Friday, September 2, 2011

உலகின் முதல் மோட்டார் சைக்கிள் (1885)

1885: உருவான முதல் உண்மையான மோட்டார் சைக்கிள் உருவாக்கியவர்
கோட்லிப் டெய்ம்லர்  தனது காப்புரிமைக்காக பல நாட்கள் போராடினார்.

டெய்ம்லர், பொதுவாக உலகின் முதல் வெற்றிகரமான உள் எரி பொருள் (மற்றும், பின்னர், முதல் ஆட்டோமொபைல்) தொடர்புடைய வாகன முன்னோடியாக, அதாவது பிரபலமான கார் வருவதற்கு ஒரு ஆண்டு முன்  இரு சக்கர உலகின் முதல் படைப்பு முன்னுரிமையும்  தன்னுடையது என்று சொல்கிறாள்.

எனினும், ஒரு மோட்டார்-உந்துதல், இரு சக்கர வாகனத்தின் யோசனை டெய்ம்லர் தொடங்குகின்றன இல்லை, அல்லது அவரது சாலை பார்க்க முதல் போன்ற contraption இருந்தது. ஒரு யூனியன் ஆயுத வேலை ஐக்கிய அமெரிக்க உள்நாட்டு போரில் , 1867 ஆரம்ப காலத்தில் ஒரு பழமையான "மோட்டார் சைக்கிள்" கட்டப்பட்டது.  சில்வெஸ்டர் ரொபேர் தான் ஆதரவாளர்களுடன் அவர் உலகின் முதல் மோட்டார் சைக்கிள் இது தான் என்ற பெருமையை வேண்டும் என்று வாதிடுகின்றனார்.

முதல் "உண்மை" மோட்டார் சைக்கிள் உருவாவதற்கான டெய்ம்லர் தான் கூறுவது நம்பகத்தன்மையை கொடுக்கிறது. என்ன அது பெட்ரோல்-இயக்கப்படும் என்று உண்மையில் உள்ளது. ஒரு சிறிய இரண்டு சிலிண்டர் இயந்திரம் ரொபேர் தான் பிந்தைய உள்நாட்டு போருக்கு பிறகு வாயு நீராவியால் இயங்கும் இருந்தது.

டெய்ம்லர் தான் மோட்டார் சைக்கிள் அடிப்படையில் ஒரு மர சைக்கிள் ஃப்ரேம் ஒரு சிலிண்டர் ஓட்டோ-சுழற்சி இயந்திரத்தின் மூலம் (நீக்கப்படும் கால் pedals சேர்த்து) இருந்தது. இது 1886 இல் இடம்பெற்ற டெய்ம்லர் ஆட்டோமொபைல் பயன்படுத்த பிறகு ஒரு தெளிப்பு-வகை எரிகலப்பியில், வளர்ச்சி கீழ் சேர்க்கப்பட வேண்டும்  என்ற கோரி்க்கை நிறைவேறியது.

ஆதாரம்: பல்வேறு

Photo: கோட்லிப் டெய்ம்லர் தயாரித்த முதல் மோட்டார் சைக்கிள்,, Neckarsulm, ஜெர்மனியில் Deutsches Zweirad-உண்ட் அருங்காட்சியத்திலும் அதற்கு பிறகு NSU-அருங்காட்சியகத்தில் இப்போதும் காணலாம்.

Thursday, September 1, 2011

விநாயகர் ஒரு ஆல்ரவுண்டர்

விநாயகர் சில மாறுபட்ட படங்கள்







விநாயகர் சில மாறுபட்ட படங்கள்

Wednesday, August 31, 2011

ஏமாளியான ஆண் இனங்கள்

பெல்ஜியம் நாட்டில் இரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் மனிதக்குரங்குகளுக்கிடையே உள்ள திறமைகளைக் கண்டுகொள்ள நடத்தப்பட்ட ஆறு போட்டிகளில் பெண் சிம்பன்ஸிகளே தன் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. பெண் சிம்பன்ஸிக்கள், போட்டிக்காக சற்று கைக்கு எட்டாமல் சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், கொட்டைகள் ஆகியவற்றை எடுக்க சின்ன மரக்கிளைகள், குச்சிகள் போன்றவற்றின் துணைகொண்டு அந்த பழங்களையும், கொட்டைகளை லாவகமாக எடுத்ததுடன் அல்லாது, சிறு கற்கள் மூலம் பழக்கொட்டைகளை மிகவும் இயற்கையாக உடைத்துத் தின்றது. ஆண் சிம்பன்ஸிக்கள் தன் மூர்க்கத்தனத்தையும், ஆண் ஆதிக்கத்தன்மையின் மூலமாகத்தான் பெண் சிம்பன்ஸிக்களை வெற்றி கொள்ளும் என்று நினைத்திருந்தனர் போட்டி அமைப்பாளர்கள்.

ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஆண் சிம்பன்ஸிகளோ பெண் சிம்பன்ஸிகளோடு போட்டிகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி மூலம் வெற்றிகொள்ளும் உத்திகளையே கையாளத்துடித்தது. இது வழக்கமாக ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் என்னும் மனித இயல்புகளை நிரூபிப்பதாகவுள்ளது என்றும், ஆனால், இந்த ஒருசில போட்டிகளின் மூலம் மனித இனங்களின் திறமைகளையும், ஜீன்களின் பண்புகளைப் பற்றியும் இறுதியான முடிவு எட்டிவிடமுடியாது என்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஸ்டீவன் என்பவர் தெரிவித்துள்ளார். 
எல்லா முட்டா பயல்களும் ஆண் இனம் தானா ?????????????

Tuesday, August 30, 2011

உழைப்பால் உயர வேண்டும் தமிழ்நாடு

தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரின் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டிருந்த ஒரு நிதர்சனமான உண்மையை தமிழ் நாட்டின் முதலமைச்சர் சட்டப் பேரவையில் தேவை உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் மட்டுமே இலவச திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் மற்ற அனைவருக்கும் கொடுத்து அவர்களை சோம்பேறி கூட்டமாக்கி விடக்கூடாது. என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார்.

மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிய பல கூட்டங்களில் ஒரு கருத்தை மிக தெளிவாக அவருக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கி இழுத்து கூறுவார். எந்த வேலைக்கும் போகாமல் சொம்பேறியாய் திரிபவர்களை அப்படி கூறுவார்
 வெந்ததையும் வேகாததையும் தின்று விட்டு. வேலை வெட்டி எதற்கும் போகாமல் சத்திரம். சாவடி கண்ட இடத்தில் படுத்து தூங்கிவிட்டு என்ன செய்கிறாய்? என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன் என்பவனெல்லாம் சமுதாயத்தில் இருந்து என்ன பயன்? என்று அவர் கூறியது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உழைப்பின் உன்னதத்தை உணர வைக்கிறது அவ்வளவு ஏன் இன்றைய காலகட்டத்திலும் ஏராளமானவர்களின் வாழும் தெய்வமாகக் கருதப்படும் ஒரு உத்தமர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உழைப்போம் உயர்வோம்! என்பார்.

உழைத்து வாழ்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. உழைத்து ஈட்டிய பணத்தில் விலை கொடுத்து, ஒரு பொருள் வாங்கினால் அது அனுபவிக்கும் போது ஏற்படும் இன்பம் இலவசங்களால் கிடைப்பதில்லை நிலைமை இவ்வாறு இருக்க வாக்காளர்களை கவர கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுக்கத் தொடங்கினர். மக்களும் ஓசியில் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வார்களா? மகிழ்ச்சியோடு வாங்கத் தொடங்கினார்கள். எல்லாமே இலவசமாக கிடைக்கத் தொடங்கியவுடன், மக்களுக்கு உழைக்கும் எண்ணம் மங்கி சோம்பேறித்தனம் தலையெடுத்து மக்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களாகவே பொருட்களை வாங்க முடிகிற தகுதியை வளர்ப்பதற்கு பதிலாக  இப்படி  ஓசிக்கு  எல்லாவற்றையும் கொடுத்து சோம்பேறியாக்குகிறோமே என்று நல்லோர் பலர் கவலைப்பட்டனர்  இதற்கெல்லாம் சரியான பதிலை முதலமைச்சர்  கூறிவிட்டார். சட்டசபையில் பேசும் போது ஏதோ ஒரு பொருளாதாரப் புரட்சியைக் கொண்டு வரப்போவதை கோடிட்டுக் காட்டி விட்டார். ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவிகளையும் இலவசமாக தரவேண்டிய அவசியம் இருக்ககூடாது.

தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. இந்த நிலையை என் வாழ்நாளில் நான் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது அது தான் என்னுடைய இலட்சியம் என்று பேசியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

          தமிழ்நாட்டில்  வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் யார் என்ற கணக்கு சரியாக இல்லை. அரசு இந்த கணக்கை துல்லியமாக எடுக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர், முதியோர்கள் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதில் தவறேயில்லை. ஆனால் உழைப்பதற்கு உடலில் தெம்பு உள்ளவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக உழைத்துப் பிழைக்க வேலையை கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி, சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி. எந்த திட்டமென்றாலும் ஏராளமான வேலைவாய்ப்பை கொடுக்க முடியுமா என்ற நோக்கில் தான் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும்.

நெற்றி வியர்வை சிந்தினாமே முத்து முத்தாக அது நெல் மணியாய் விளைந்திருக்கு கொத்துகொத்தாக என்று உழைப்போம் உயர்வோம் என்ற இத்தகைய தமிழகத்தை காண்பதே அனைவரின் விருப்பமாக இருக்கட்டும்...

Saturday, August 27, 2011

பூமிக்கு அடியில் ஓடும் மிகப்பெரிய ஆறு

பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டது. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி போஷ்டோ அமேஷானால் என்ற இடத்தில் உள்ள கடலில் கலக்கிறது. அது கோலிமோல், அமேஷோனா மற்றும் மராஜோ ஆகிய இடங்கள் வழியாக ஓடுவதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொண்ட விஞ்ஞானிகள் தற்போதுதான் ஆறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வருகிற 2014-ம் ஆண்டிற்குள் அதுபற்றிய முழுமையான விவரங்களை ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்

Sunday, August 21, 2011

இளைஞர்களின் எழுச்சி நாயகன்

      கடந்த வாரத்தில் நமது காந்திய தேசத்து பாரத பிரதமர் உண்ணாவிரதத்தால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று கூறியவர் இன்று அதை தவறு என்று உணர்த்தும் வகையில் அன்னாவின் பின்னால் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் எழுச்சியும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின்  மன வேதனைகளும் அன்னாவிற்கு முழுவதுமாக ஆதரவாக உள்ளது அகிம்சையால் அடைந்த சுதந்திர நாட்டில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் என்றுதான் கூற வேண்டும்.

           அன்னாஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னாஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் கூறியதாவது:-

மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கதவு மூடப்படவில்லை. திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும்.   எங்களுடன் பேச்சு நடத்த தயார் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து முறைப்படி எந்த தகவலும் வரவில்லை.
 
பாராளுமன்றத்தை விட, மக்கள் மன்றம் மிக உயர்ந்தது. எம்.பி.க்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அனுப்பவில்லை. இப்போது மக்கள் இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டார்கள். ஊழலில் ஈடுபட்ட மந்திரிகள் பதவி இழந்துள்ளனர். சிலர் சிறையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரி வால் கூறுகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி யாருடன் எங்கே போய் பேச்சு நடத்துவது என்று தெரியவில்லை என்றார்.   எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அன்னாஹசாரேயும், கெஜ்ரிவாலும் நேற்று தெரிவித்து இருந்தனர். இப்போது மத்திய மந்திரிகளின் வீடுகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பும் தர்ணாவில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
     காங்கிரஸ் கட்சியின் கபட நாடகத்தின் மூலம் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி எரியும் விளக்கை அனைத்துவிடலாம் என மூத்த அரசியல் தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர் ஆனால் இந்தியாவி்ன் அனைத்து இளைஞர் சக்திகளும் ஒன்று திரண்டு மிகப் பெரிய போரட்டத்தை அரசாங்கம் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை

நம்மால் முடிந்த பங்கை அந்தந்த பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் பங்கேற்போம். நாங்கள் காந்தியை பார்த்தது இல்லை ஆனால். இந்த காந்தியவதி (அன்னா ஹசாரே) இந்த நாட்டுக்கு தேவையான காந்தியாக வாழ்கிறார் இளைஞர்கள் மனதில்.
இந்த வயதான இளைஞனுக்கு பின்னால் துணை நிற்போம்

Monday, August 15, 2011

மதராசபட்டிணம்

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி வந்தாச்சு

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறையில் 2 1/2 மாதமாக நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு ஏற்பட்டது.

ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது முதல் இதுவரை மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தை கற்று கொடுப்பது என்று தெரியாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சமச்சீர் புத்தகங்களை வினியோகம் செய்யும் பணியை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. அந்தந்த மாவட்ட மையங்களில் புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளன. 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உடனே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசுகிறேன். மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். 10 நாட்களுக்குள் புத்தகம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருந்தாலும் அதற்கு முன்னதாகவே புத்தகங்களை வினியோகம் செய்து விடுவோம்.
 பல போரட்டத்திற்கு பிறகு சமச்சீர் கல்வி தழிழ்நாட்டில் அமல்பாடுத்தியாச்சு

எதற்காக இந்த  3மாதமாக மாணவர்கள அலைகழிப்பு செய்ய வேண்டும்.
பண விரயத்தையும் அரசாங்கத்தின் நேரத்தையும். நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்து. கல்வியையும் வேதனைப்படுத்தி ஒரு வழியாக
அரசியல்வாதிகளின் விளையாட்டு முடிவுக்கு வந்தது. இனிமேலாவது கல்வியின் பணி தடைபடாமல் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.