Pages

Wednesday, August 31, 2011

ஏமாளியான ஆண் இனங்கள்

பெல்ஜியம் நாட்டில் இரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆண், பெண் மனிதக்குரங்குகளுக்கிடையே உள்ள திறமைகளைக் கண்டுகொள்ள நடத்தப்பட்ட ஆறு போட்டிகளில் பெண் சிம்பன்ஸிகளே தன் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது. பெண் சிம்பன்ஸிக்கள், போட்டிக்காக சற்று கைக்கு எட்டாமல் சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், கொட்டைகள் ஆகியவற்றை எடுக்க சின்ன மரக்கிளைகள், குச்சிகள் போன்றவற்றின் துணைகொண்டு அந்த பழங்களையும், கொட்டைகளை லாவகமாக எடுத்ததுடன் அல்லாது, சிறு கற்கள் மூலம் பழக்கொட்டைகளை மிகவும் இயற்கையாக உடைத்துத் தின்றது. ஆண் சிம்பன்ஸிக்கள் தன் மூர்க்கத்தனத்தையும், ஆண் ஆதிக்கத்தன்மையின் மூலமாகத்தான் பெண் சிம்பன்ஸிக்களை வெற்றி கொள்ளும் என்று நினைத்திருந்தனர் போட்டி அமைப்பாளர்கள்.

ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாக, ஆண் சிம்பன்ஸிகளோ பெண் சிம்பன்ஸிகளோடு போட்டிகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி மூலம் வெற்றிகொள்ளும் உத்திகளையே கையாளத்துடித்தது. இது வழக்கமாக ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் என்னும் மனித இயல்புகளை நிரூபிப்பதாகவுள்ளது என்றும், ஆனால், இந்த ஒருசில போட்டிகளின் மூலம் மனித இனங்களின் திறமைகளையும், ஜீன்களின் பண்புகளைப் பற்றியும் இறுதியான முடிவு எட்டிவிடமுடியாது என்று இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஸ்டீவன் என்பவர் தெரிவித்துள்ளார். 
எல்லா முட்டா பயல்களும் ஆண் இனம் தானா ?????????????

Tuesday, August 30, 2011

உழைப்பால் உயர வேண்டும் தமிழ்நாடு

தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பலரின் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டிருந்த ஒரு நிதர்சனமான உண்மையை தமிழ் நாட்டின் முதலமைச்சர் சட்டப் பேரவையில் தேவை உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் மட்டுமே இலவச திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும் மற்ற அனைவருக்கும் கொடுத்து அவர்களை சோம்பேறி கூட்டமாக்கி விடக்கூடாது. என்பதை ஆணித்தரமாக கூறியுள்ளார்.

மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிய பல கூட்டங்களில் ஒரு கருத்தை மிக தெளிவாக அவருக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கி இழுத்து கூறுவார். எந்த வேலைக்கும் போகாமல் சொம்பேறியாய் திரிபவர்களை அப்படி கூறுவார்
 வெந்ததையும் வேகாததையும் தின்று விட்டு. வேலை வெட்டி எதற்கும் போகாமல் சத்திரம். சாவடி கண்ட இடத்தில் படுத்து தூங்கிவிட்டு என்ன செய்கிறாய்? என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன் என்பவனெல்லாம் சமுதாயத்தில் இருந்து என்ன பயன்? என்று அவர் கூறியது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உழைப்பின் உன்னதத்தை உணர வைக்கிறது அவ்வளவு ஏன் இன்றைய காலகட்டத்திலும் ஏராளமானவர்களின் வாழும் தெய்வமாகக் கருதப்படும் ஒரு உத்தமர். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உழைப்போம் உயர்வோம்! என்பார்.

உழைத்து வாழ்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. உழைத்து ஈட்டிய பணத்தில் விலை கொடுத்து, ஒரு பொருள் வாங்கினால் அது அனுபவிக்கும் போது ஏற்படும் இன்பம் இலவசங்களால் கிடைப்பதில்லை நிலைமை இவ்வாறு இருக்க வாக்காளர்களை கவர கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுக்கத் தொடங்கினர். மக்களும் ஓசியில் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வார்களா? மகிழ்ச்சியோடு வாங்கத் தொடங்கினார்கள். எல்லாமே இலவசமாக கிடைக்கத் தொடங்கியவுடன், மக்களுக்கு உழைக்கும் எண்ணம் மங்கி சோம்பேறித்தனம் தலையெடுத்து மக்களின் வருமானத்தை பெருக்கி, அவர்களாகவே பொருட்களை வாங்க முடிகிற தகுதியை வளர்ப்பதற்கு பதிலாக  இப்படி  ஓசிக்கு  எல்லாவற்றையும் கொடுத்து சோம்பேறியாக்குகிறோமே என்று நல்லோர் பலர் கவலைப்பட்டனர்  இதற்கெல்லாம் சரியான பதிலை முதலமைச்சர்  கூறிவிட்டார். சட்டசபையில் பேசும் போது ஏதோ ஒரு பொருளாதாரப் புரட்சியைக் கொண்டு வரப்போவதை கோடிட்டுக் காட்டி விட்டார். ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவிகளையும் இலவசமாக தரவேண்டிய அவசியம் இருக்ககூடாது.

தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டி பெறுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. இந்த நிலையை என் வாழ்நாளில் நான் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது அது தான் என்னுடைய இலட்சியம் என்று பேசியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

          தமிழ்நாட்டில்  வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் யார் என்ற கணக்கு சரியாக இல்லை. அரசு இந்த கணக்கை துல்லியமாக எடுக்க வேண்டும். உடல் ஊனமுற்றோர், முதியோர்கள் போன்றவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதில் தவறேயில்லை. ஆனால் உழைப்பதற்கு உடலில் தெம்பு உள்ளவர்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதிலாக உழைத்துப் பிழைக்க வேலையை கொடுப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி, சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி. எந்த திட்டமென்றாலும் ஏராளமான வேலைவாய்ப்பை கொடுக்க முடியுமா என்ற நோக்கில் தான் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும்.

நெற்றி வியர்வை சிந்தினாமே முத்து முத்தாக அது நெல் மணியாய் விளைந்திருக்கு கொத்துகொத்தாக என்று உழைப்போம் உயர்வோம் என்ற இத்தகைய தமிழகத்தை காண்பதே அனைவரின் விருப்பமாக இருக்கட்டும்...

Saturday, August 27, 2011

பூமிக்கு அடியில் ஓடும் மிகப்பெரிய ஆறு

பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டது. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி போஷ்டோ அமேஷானால் என்ற இடத்தில் உள்ள கடலில் கலக்கிறது. அது கோலிமோல், அமேஷோனா மற்றும் மராஜோ ஆகிய இடங்கள் வழியாக ஓடுவதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொண்ட விஞ்ஞானிகள் தற்போதுதான் ஆறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வருகிற 2014-ம் ஆண்டிற்குள் அதுபற்றிய முழுமையான விவரங்களை ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்

Sunday, August 21, 2011

இளைஞர்களின் எழுச்சி நாயகன்

      கடந்த வாரத்தில் நமது காந்திய தேசத்து பாரத பிரதமர் உண்ணாவிரதத்தால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று கூறியவர் இன்று அதை தவறு என்று உணர்த்தும் வகையில் அன்னாவின் பின்னால் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் எழுச்சியும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின்  மன வேதனைகளும் அன்னாவிற்கு முழுவதுமாக ஆதரவாக உள்ளது அகிம்சையால் அடைந்த சுதந்திர நாட்டில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் என்றுதான் கூற வேண்டும்.

           அன்னாஹசாரேயின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சு நடத்தவும், அவரது குழுவினருடன் விவாதிக்கவும் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்னாஹசாரே இன்று ராம்லீலா மைதான உண்ணாவிரத மேடையில் இருந்தவாறு ஆதரவாளர்கள் மத்தியில் கூறியதாவது:-

மத்திய அரசுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கதவு மூடப்படவில்லை. திறந்தே வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும்.   எங்களுடன் பேச்சு நடத்த தயார் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து முறைப்படி எந்த தகவலும் வரவில்லை.
 
பாராளுமன்றத்தை விட, மக்கள் மன்றம் மிக உயர்ந்தது. எம்.பி.க்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க அனுப்பவில்லை. இப்போது மக்கள் இந்த விஷயத்தில் விழித்துக் கொண்டார்கள். ஊழலில் ஈடுபட்ட மந்திரிகள் பதவி இழந்துள்ளனர். சிலர் சிறையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரி வால் கூறுகையில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து 5 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி யாருடன் எங்கே போய் பேச்சு நடத்துவது என்று தெரியவில்லை என்றார்.   எம்.பி.க்கள் வீடுகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு அன்னாஹசாரேயும், கெஜ்ரிவாலும் நேற்று தெரிவித்து இருந்தனர். இப்போது மத்திய மந்திரிகளின் வீடுகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பும் தர்ணாவில் ஈடுபடுமாறு ஆதரவாளர்களுக்கு இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
     காங்கிரஸ் கட்சியின் கபட நாடகத்தின் மூலம் இந்த உண்ணாவிரதத்தை நிறுத்தி எரியும் விளக்கை அனைத்துவிடலாம் என மூத்த அரசியல் தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர் ஆனால் இந்தியாவி்ன் அனைத்து இளைஞர் சக்திகளும் ஒன்று திரண்டு மிகப் பெரிய போரட்டத்தை அரசாங்கம் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை

நம்மால் முடிந்த பங்கை அந்தந்த பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் பங்கேற்போம். நாங்கள் காந்தியை பார்த்தது இல்லை ஆனால். இந்த காந்தியவதி (அன்னா ஹசாரே) இந்த நாட்டுக்கு தேவையான காந்தியாக வாழ்கிறார் இளைஞர்கள் மனதில்.
இந்த வயதான இளைஞனுக்கு பின்னால் துணை நிற்போம்

Monday, August 15, 2011

மதராசபட்டிணம்

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி வந்தாச்சு

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறையில் 2 1/2 மாதமாக நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு ஏற்பட்டது.

ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது முதல் இதுவரை மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தை கற்று கொடுப்பது என்று தெரியாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சமச்சீர் புத்தகங்களை வினியோகம் செய்யும் பணியை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. அந்தந்த மாவட்ட மையங்களில் புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளன. 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உடனே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசுகிறேன். மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். 10 நாட்களுக்குள் புத்தகம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருந்தாலும் அதற்கு முன்னதாகவே புத்தகங்களை வினியோகம் செய்து விடுவோம்.
 பல போரட்டத்திற்கு பிறகு சமச்சீர் கல்வி தழிழ்நாட்டில் அமல்பாடுத்தியாச்சு

எதற்காக இந்த  3மாதமாக மாணவர்கள அலைகழிப்பு செய்ய வேண்டும்.
பண விரயத்தையும் அரசாங்கத்தின் நேரத்தையும். நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்து. கல்வியையும் வேதனைப்படுத்தி ஒரு வழியாக
அரசியல்வாதிகளின் விளையாட்டு முடிவுக்கு வந்தது. இனிமேலாவது கல்வியின் பணி தடைபடாமல் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

Sunday, August 7, 2011

வலையுலக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

வழிகள் தெரியாத இந்த வலை உலகத்தில்
நான் போகும் வழிகள் யாவும் உதவிடும் என் நண்பர்களாய்
எனக்கு பாரட்டை அளித்து வளர்த்து விடும் நல்ல தோழர்களாய்
எதிர்பார்ப்பு இல்லாமல் பழகிடும் என் இனியவர்களாய்
எனக்கு பாதுகாப்பாய் என்னை பின் தொடரும் உறவுகளாய்
இன்னும் தொடரட்டும் நமது நீண்ட நெடிய நட்பு பயணம்
பயனுள்ள தகவல்களை அளித்து சிலருக்கு பயன்படுவோம்
வலை உலக நட்புக்கும் மிக வலிமை என்று உணர்த்துவோம்
துயரங்களில் துணைநிற்போம்
காக்கைகள் போல் ஒற்றுமையாய் பழகிடுவோம்

இந்த கிராமத்து காக்கையின் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

Saturday, August 6, 2011

மரங்களை வெட்டுங்கள் நாடு வளம் பெறும்

         மரங்களை வெட்டுங்கள் என்று கூறுவதற்காக உடனே கருத்து ஏவுகணைகளை கொண்டு தாக்காதீர்கள் இதுவும் ஒரு விழிப்புணர்வு செய்திதான்.

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ‘ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்க கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘ யாம் அறியேன் பராபரமே’

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல…! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது….. ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது
.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??! என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Thursday, August 4, 2011

கேரளத்து அழகுகள்

கேரளாவின் சில அமைதி ஓடங்கள்









Wednesday, August 3, 2011

இந்தியாவின் இலவச தொலைபேசி எண்கள்

  • இந்தியாவி்ன் அனைத்து toll Free Phone Number களின் தொகுப்பு 
  •  Airlines
  • Indian Airlines                     - 1800 180 1407
  • Jet Airways                         - 1800 22 5522
  • Spice Jet                            - 1800 180 3333
  • Air India -                          - 1800 22 7722
  • Kingfisher                          - 1800 180 0101
  • ===================================
  • Banks
  • ABN AMRO                          - 1800 11 2224
  • Canara Bank                       - 1800 44 6000
  • Citibank                             - 1800 44 2265
  • Corporation Bank                - 1800 443 555
  • Development Credit Bank     - 1800 22 5769
  • HDFC Bank                         - 1800 227 227
  • ICICI Bank                          - 1800 333 499
  • ICICI Bank NRI                    - 1800 22 4848
  • IDBI Bank                           - 1800 11 6999
  • Indian Bank                        - 1800 425 1400
  • ING Vysya                           - 1800 44 9900
  • Kotak Mahindra Bank            - 1800 22 6022
  • Lord Krishna Bank                - 1800 11 2300
  • Punjab National Bank           - 1800 122 222
  • State Bank of India              - 1800 44 1955
  • Syndicate Bank                    - 1800 44 6655
  • ===================================
  • Automobiles
  • Mahindra Scorpio                  - 1800 22 6006
  • Maruti                                 - 1800 111 515
  • Tata Motors                          - 1800 22 5552
  • Windshield Experts                - 1800 11 3636
  • ===================================
  • Computers/IT
  • Adrenalin                              - 1800 444 445
  • AMD                                     - 1800 425 6664
  • Apple Computers                    - 1800 444 683
  • Canon                                   - 1800 333 366
  • Cisco Systems                        - 1800 221 777
  • Compaq - HP                          - 1800 444 999
  • Data One Broadband               - 1800 424 1800
  • Dell                                      - 1800 444 026
  • Epson                                   - 1800 44 0011
  • eSys                                      - 3970 0011
  • Genesis Tally Academy            - 1800 444 888
  • HCL                                      - 1800 180 8080
  • IBM                                      - 1800 443 333
  • Lexmark                                - 1800 22 4477
  • Marshals Point                       - 1800 33 4488
  • Microsoft                               - 1800 111 100
  • Microsoft Virus Update            - 1901 333 334
  • Seagate                                - 1800 180 1104
  • Symantec                              - 1800 44 5533
  • TVS Electronics                      - 1800 444 566
  • WeP Peripherals                    - 1800 44 6446
  • Wipro                                  - 1800 333 312
  • Xerox                                  - 1800 180 1225
  • Zenith                                 - 1800 222 004
  • ===========================
  • Indian Railway Enquiries
  • Indian Railway General Enquiry         -131
  • Indian Railway Central Enquiry        -131
  • Indian Railway Reservation         -131
  • Indian Railway Railway Reservation Enquiry -1345,1335,1330
  • Indian Railway Centralised Railway Enquiry -1330/1/2/3/4/ 5/6/7/8/9
  • =========================================
  • Couriers/Packers & Movers
  • ABT Courier                        - 1800 44 8585
  • AFL Wizz                           - 1800 22 9696
  • Agarwal Packers & Movers    - 1800 11 4321
  • Associated Packers P Ltd     -  1800 21 4560
  • DHL                                   - 1800 111 345
  • FedEx                                - 1800 22 6161
  • Goel Packers & Movers         - 1800 11 3456
  • UPS -                                   1800 22 7171
  • =======================================
  • Home Appliances
  • Aiwa/Sony                           -1800 11 1188
  • Anchor Switches                   -1800 22 7979
  • Blue Star                             -1800 22 2200
  • Bose Audio                          -1800 11 2673
  • Bru Coffee Vending Machines   1800 44 7171
  • Daikin Air Conditioners         - 1800 444 222
  • DishTV                               - 1800 12 3474
  • Faber Chimneys                   - 1800 21 4595
  • Godrej                                - 1800 22 5511
  • Grundfos Pumps                   - 1800 33 4555
  • LG                                      - 1901 180 9999
  • Philips                                 -1800 22 4422
  • Samsung                             - 1800 113 444
  • Sanyo                                 - 1800 11 0101
  • Voltas                                - 1800 33 4546
  • WorldSpace Satellite Radio   - 1800 44 5432
  • ==========================
  • Investments/ Finance
  • CAMS                                - 1800 44 2267
  • Chola Mutual Fund              - 1800 22 2300
  • Easy IPO ' s                       - 3030 5757
  • Fidelity Investments           - 1800 180 8000
  • Franklin Templeton Fund      - 1800 425 4255
  • J M Morgan Stanley             - 1800 22 0004
  • Kotak Mutual Fund              - 1800 222 626
  • LIC Housing Finance            - 1800 44 0005
  • SBI Mutual Fund                  - 1800 22 3040
  • Sharekhan                          - 1800 22 7500
  • Tata Mutual Fund                 - 1800 22 0101
  • ==================================
  • Travel
  • Club Mahindra Holidays        - 1800 33 4539
  • Cox & Kings                        - 1800 22 1235
  • God TV Tours                       - 1800 442 777
  • Kerala Tourism                     - 1800 444 747
  • Kumarakom Lake Resort        - 1800 44 5030
  • Raj Travels & Tours               - 1800 22 9900
  • Sita Tours                            - 1800 111 911
  • SOTC Tours                          - 1800 22 3344
  • ==================================
  • Healthcare
  • Best on Health                      - 1800 11 8899
  • Dr Batras                              - 1800 11 6767
  • GlaxoSmithKline                    - 1800 22 8797
  • Johnson & Johnson                - 1800 22 8111
  • Kaya Skin Clinic                    - 1800 22 5292
  • LifeCell                               - 1800 44 5323
  • Manmar Technologies            - 1800 33 4420
  • Pfizer                                  - 1800 442 442
  • Roche Accu-Chek                  - 1800 11 45 46
  • Rudraksha                           - 1800 21 4708
  • Varilux Lenses                     - 1800 44 8383
  • VLCC                                  - 1800 33 1262
  • =================================
  • Insurance
  • AMP Sanmar                       - 1800 44 2200
  • Aviva                                - 1800 33 2244
  • Bajaj Allianz                      - 1800 22 5858
  • Chola MS General Insurance - 1800 44 5544
  • HDFC Standard Life            - 1800 227 227
  • LIC - 1800 33 4433
  • Max New York Life             - 1800 33 5577
  • Royal Sundaram                - 1800 33 8899
  • SBI Life Insurance             - 1800 22 9090
  • =================================
  • Hotel Reservations
  • GRT Grand                        -1800 44 5500
  • InterContinental Hotels Group     - 1800 111 000
  • Marriott                           - 1800 22 0044
  • Sarovar Park Plaza            - 1800 111 222
  • Taj Holidays                     - 1800 111 825
  • ====================================
  • Teleshopping
  • Asian Sky Shop                - 1800 22 1800
  • Jaipan Teleshoppe            - 1800 11 5225
  • Tele Brands                     - 1800 11 8000
  • VMI Teleshopping             - 1800 447 777
  • WWS Teleshopping           - 1800 220 777
  • ======================================
  • Others
  • Domino ' s Pizza                -1800 111 123
  • ==================================
  • Cell Phones
  • BenQ                              - 1800 22 08 08
  • Bird CellPhones                - 1800 11 7700
  • Motorola MotoAssist         - 1800 11 1211
  • Nokia                             - 3030 3838
  • Sony Ericsson                  - 3901 1111


    Tuesday, August 2, 2011

    நோக்கியா நிறுவனத்தின் சில உண்மை தகவல்

    உலகின் நம்பர் ஒன் செல்போன் தயாரிப்பாளர் நோக்கியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.இன்றைக்கும் செல்போன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நோக்கியாவே.உலகின் 36 சதவீத செல்போன்கள் அவர்களுடையது. இவர்களின் முதல் செல்போன் மாடல் Mobira Senator.1982-ல் வெளியானது.

    நோக்கியாவின் 1 பில்லியனான செல்போன் மாடல் Nokia 1100. இது நைஜீரியாவில் விற்க்கப்பட்டதாம். இதுவரை ஏறக்குறைய 400 மாடல்கள் வெளியிட்டுள்ளனர். முதல் ஹிட் 1994-ல் வெளியான 2100 மாடல்.20 மில்லியன்கள் விற்றன. உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன Nokia 3310 / 3330 மாடல் 126 மில்லியன்கள் விற்று சாதனை படைத்தன.இந்த 126 மில்லியன் போன்களையும் வரிசைப்படுத்தி அடுக்கினால் 13,500 கிலோமீட்டர் நீளம் போகுமாம்.2004-ல் நோக்கியாவால் 207.7 மில்லியன் போன்கள் தயாரிக்கப்பட்டது. அதாவது 6.5 நொடிகளுக்கு ஒரு போன். நோக்கியா போனில் SMS வந்தால் ஒலிக்கும் விஷேச ஒலி உண்மையில் SMS என்ற வார்த்தையின் மோர்ஸ்கோடாம்.(Morse code) .
    கேமரா கொண்ட போன்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாதலால் உலகளவில் இப்போதைக்கு அதிக டிஜிட்டல் கேமரா தயாரிப்பாளரும் இவர்களே. அதிக அளவில் திருடு போகும் செல்போன்களும் நோக்கியா செல்போன்களே."நோக்கியா ரிங்டோன்" என அறியப்படும் அந்த புகழ் பெற்ற ரிங்டோன் 19ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஸ்பானிய கிடார் இசைகலைஞரின் (Francisco Tárrega.) இசையை அடிப்படையாக கொண்டது.உலகின் முதல் GSM காலை பண்ணியவர் முன்னாள் பின்லாந்து பிரதமர் Harri Holkeri. இந்த அழைப்பு 1991-ல் ஹெல்சிங்கியில் ஒரு நோக்கியா போனை பயன்படுத்தி உண்டாக்கப்பட்டது.நோக்கியா கம்பனி போன்கள் தவிர பிற Digital Televisions, ADSL Modems, Wireless LAN interfaces, Telephone switches, GPS devices, Terrestrial trunked radios, இன்னும் Security Solutions தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. தலைமையகம் Nokianvirta ஆற்றின் கரையோரம் Keilaniemi, Espoo, Finland-ல் உள்ளது