Pages

Wednesday, May 15, 2013

கீரைக்காரி


           இன்னிக்கு காலை எழுந்திருக்கும்போதே எங்க வீட்ல வாசல்ல  என் அம்மா கீரை வாங்கு பெண்ணிடம் 5 நிமிடமாக பேரம் பேசுறாங்க நான் எழுந்து வெளியேபோனேன் பிறகு கீரைக்காரியம்மாவிடம் என் அம்மா காசு கொடுத்து அனுப்பி விட்டார். எங்க வீட்ல மாசத்துல 2 தடவையாச்சு எனக்கும் என் அம்மாவுக்கும்  வாக்குவாதம் நடக்கும். அவங்க கேட்குற காசு கொடுத்து அனுப்பு மா உன் கிட்ட வாங்கு காசு வைத்து ஒன்னும் அவங்க பெரிய வீடு ஒன்றும் கட்ட போவதில்லை தினசரி செலவுக்கே அவங்களுக்கு போதுமானதாக இருக்காது. கீரைகட்டு 15 அல்லது 20 ரூபாய் விற்றால் என்ன அவர்களுக்கு அதிகபட்சம 5 ரூபாய் கிடைக்கும் தெருத்தெருவாய் பாரத்தை தூக்கி அலையுறாங்க அவங்கிட்டயெல்லாம் பேரம் பேசமா கேட்குற காசு கொடும்மா என விளக்கமாக  கூறுவேன் சரி சரி என்று தலையாட்டுவாங்க ஆன அடுத்த தடவை இதே பேரம் போசுற வேலைதான் நடக்கும்.