Pages

Saturday, January 28, 2012

தொலைக்காட்சி லாட்டரியில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள்

“விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில்  தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு மக்களி்ன வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிந்தன இதனால் முந்தைய ஆட்சிகாலத்தில் ஜெயலிலதா அவர்களால் தடைசெய்யப்பட்டு இன்றளவும் அமலில் உள்ளது.

ஆனால் மக்களின் ஆசை என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு டி.விக்கள் வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து விட்டு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புங்கள் என்று  சொல்வதை நம்பி பல லட்சம்  மக்கள் SMS அனுப்புகிறார்கள் அதில் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம். அவர்கள் தரும் பரிசுத்தொகைவிட பல நூறு மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியாது,

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஒடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியை கேட்டு அதற்கான விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் டி.வியில் ஒளிபரப்பானது. அவர்களின் கேள்விக்கு உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவே ரூ.5000 பரித்தொகை பெற்றுவிடும் ஆசையில் உடனே ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள முயல்வார்கள் ஆனால் ஒருவருக்கும் சிறிது நேரம் லைன் கிடைக்குது அவர்களின் ரேட்டிங் உயரும்.

ஆனால் நிமிடத்திற்கு ரூ.10 என மக்களின் பணம் கரைந்து கொண்டிருக்கும் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் ரூ. 20 போய்விடும் இந்த ரூ. 20 யில் 14 ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மீதி கூட கொள்கையடிக்கும் செல்போன் நிறுவனத்திற்கும் சேரும். சுமார் ஒரு லட்சம் போர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்து கொண்டாலும் மொத்த வருமானம் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை உள்ளிட்ட எல்லா செலவும் ரூ.2 லட்சம் மட்டுமே மீதியெல்லாம் கொள்ளை லாபம்.

 இதற்கும் ஒரு படி மேலே போய் மக்களை கோடிஸ்வரன் ஆக்கிடுவோம் என்று  மக்களை ஏமாற்ற பெரிய நிறுவனம் கவர்ச்சி நடிகர் என மக்களின் பணத்தை சுரண்ட ஒரு பெரிய பட்டாளம் இறங்விட்டார்கள. இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 2sms அனுப்ப வேண்டும். 



தமிழகத்தின் ஏழு கோடி மக்களில்  தினமும் 10 லட்சம் மக்களையாவது பலிகட ஆக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். டி.வி. நியுஸ் பேப்பர். பேஸ்புக். Fm அனைத்திலும் மிகப்பெரிய விளம்பரம் செய்து  ஒருநாளுக்கு SMS மூலம் செல்போன் நிறுவனங்களின் தினமும் வருமானம் 1கோடி. நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ரூ. 50 லட்சம் இப்படி 7 நாட்களின் வருமானம் 7 கோடி இது 10லட்சம் பேரின் கணக்குதான் இதுவே தினம் 1கோடி மக்கள் கூட SMS அனுப்புகிறார்களாம் அப்படி என்றால் வருமானம் ????

பரிசு பெரும் அந்த நபர் 10 லட்சமோ 15 லட்சமோ தான் இருக்கும்  இது தவிர விளம்பரம்  போன்றவை மொத்தமாக பார்த்தால் ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 20 கோடி வருமானம் கிடைக்குமாம்.

இப்படி தழிழர்களின் பணத்தை சுரண்டப்படுவதை பற்றி யாரும் கவலை பட்டதாக தெரியவில்லை அரசாங்கமும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக எனது சகோதரர் முதல் வாரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் sms அனுப்பி ரூ. 120 இழந்துள்ளார்.  இப்படி பல கோடி மோசடி செய்து இன்னும் அந்தகோடீஸ்வர நிழ்ச்சி இன்னும் ஆரம்பித்ததாக தெரியவில்லை.

கோடிகளுக்காக அலைந்து தெருக்கோடியில் நிற்கும் ஏமாளி தழிழர்களா நாம்???????????

Thursday, January 26, 2012

குடியரசு தினமும் மத்திய அரசின் கஞ்சத்தனமும்

பிரபல தமிழ் நாளிதழில் 11 பக்கத்தில் இன்று குடியரசு தினத்திற்கான மத்திய அரசின் விளம்பரம்

இந்த விளம்பரத்திலுள்ள வாசகம்
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மூவர்ணகொடி நமது சுயமரியதை
இந்த விளம்பரத்தில் நமது தேசிய கொடியின் ஒருவர்ணமும் இல்லை
எவ்வளவு சிக்கனம் இது தான் மக்களுக்காக  அரசு கட்டும் சுயமரியாதை தலைவர்களின் படங்களுடன்  13 பக்கத்தில் அழகிய மல்டி கலருடன் விளம்பரம் செய்ய லட்சங்களில் செலவு செய்யும் மத்திய அரசு மக்களுக்கு இது போதும் என்ற நினைப்பும் மூவர்ணகொடி வாசகம் வேற

அடுத்தாக இந்த பிரபல பத்திரிக்கை கள்ளகாதலை கட்டம் போட்டு கலரில்
கொடுக்கும் இந்த நாளேடு ஏனே மத்திய அரசு கொடுத்த பணத்திற்கு சரியாக வேலை செய்கிறது.  அதில் கொடுக்கப்பட்ட வாசகத்திற்காகவாவது
கலரில் அச்சிட்டு இருக்கலாம்? 

 இது தான் பத்திரிக்கை சுதந்திரமோ..........

Sunday, January 15, 2012

அம்மாவும் பொங்கலும்

இந்த ஆண்டுக்கான முதல் பதிவை பொங்கல் அன்றாவது எழுத வேண்டும் என்று ஒரு வரமாக சிந்தனை எதைப்பற்றி எழுதலாம் என்று.
கடுமையான பணிச்சுமையால் பிளாக் பக்கம் வருவதே குறைந்து விட்டது எதாவது ஒரு பதிவை எழுதி ஆக வேண்டும் என்று நேற்று நீண்ட நேரம் நினைத்துகொண்டே படுத்தேன்.


ஒவ்வொரு பொங்களுக்கும் எங்கள் கிராமத்துக்கு செல்வோம் இந்த வருடம் அண்ணின் திருமணம் காரணமாக சில வேலைகள் இருப்பதால் சென்னையில் தான்.

காலை 6.30 மணிக்கு அம்மா வந்து எழுப்பினார்கள் என்னைக்குமே அவர்கள் இவ்வளவு சீக்கிரமாக எழுப்பமாட்டார்கள். தெருவில் கோலம் போட்டுள்ளேன் அதை வந்து படம் எடு என்று கூப்பிட்டார்கள் கூட மாட தான் யாரும் உதவி செய்ய மாட்டிங்க இதை ஒரு படமாவது எடுத்து வை என்று கூறிகொண்டு இருந்தார். விடியற்காலை 4.30 மணிக்கு எழுந்து கோலம் போட்டுள்ளார்கள் போல. அடுத்த பொங்கலுக்கு எல்லாம் கூட ஒரு பெண்ணு இருப்பாள் என்று தனது மருமகளை எதிர்நோக்கி கூறி கொண்டு இருந்தார். இந்த ஆண்டின் முதல் பதிவை அம்மாவைப் பற்றி உடனடியாக எழுதலாம் என்று உட்கார்ந்து விட்டேன்.


கிராமத்திலிருக்கும் பெண்கள் எல்லாரும் திருமணம் செய்து நகரத்தை நோக்கியே அவர்கள் வாழ்க்கை இருக்கும் ஆனால் எங்கம்மா மட்டும் இதற்கு விதிவிலக்கு சென்னையில் பிறந்து வளர்ந்த எங்கம்மா எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சரியான பட்டிக்காட்டு கிராமத்தில் வாழ்கைப்பட்டார்கள் (கஷ்டபட்டார்கள்) என்று தான் செல்ல வேண்டும்.
எந்த வேலையும் தெரியாமல் கிராமத்திற்கு குடிபெயர்ந்த அவர்கள் கிராமத்து பெண்களையும் மி்ஞ்சி வயல் வேலைகள் அனைத்தும் அருமையாக செய்தார்கள். பல பேர் பட்டணத்திலிருந்து வந்து அருமை எல்லா விவசாய வேலைகளும் செய்யுறாங்க பாரு என்று கிராமத்து பெண்கள் பல பேர் கூறுவதை நாங்களே பல முறை கேட்டிருக்கிறோம்.


எங்களது பள்ளி நாட்களில் எங்களது பிடிவதாத்திற்கும். வறுமைக்கும். கொடுமைக்கார மாமியாரின் ஆட்டத்திற்கும். போதது என்று வயல் வெளிகளில் ஆட்கள் இல்லாம் தானே செய்யும் வயல் வேலை என்று பம்பரமாக சுழன்று சுழன்று பாரத்தை சுமையாக இல்லாமல் சுகமாகவே சுமந்தார்கள் பல நாட்கள் அவர்கள் இரண்டும் பையனா பெத்து தொலைச்சுட்டேன் ஒரு பெண் புள்ளை இருந்த எனக்கு எவ்வளவு ஒத்தாசக இருப்பாள் என கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலையை அதிகரிக்க செய்வோமே ஒழிய உதவி என்று செய்தாக நினைவில்லை.
   சுமார் 25 வருடம் கிராமத்து வாழ்கையிலும் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபாடும் கிராமத்து குடும்ப தலைவிகளில் ஒருவராய் வாழ்ந்து வந்தார். விவசாயத்தை மட்டுமே செய்பவன் பணக்காரனாக முடியாது கடன்காரனாக தான் ஆக முடியும் என்பது எங்கள் கிராமத்தின் சாபக்கேடு. கடன் சூழலில் இருந்து மீள்வதற்கு ஓரே வழி விவசாயத்தை கைவிட்டு விட்டு  நகரத்தை நோக்கி புலம்பெயர்வதே சிறந்ததாக உள்ளது எங்களது கிராமத்தின் தலையெழுத்து புலம்பெயர்ந்தவர்கள் எல்லாம் ஓரளவு வசதி வாய்ப்புடன் கடன் இல்லாமல் நிம்மதியாக தான் உள்ளார்கள் அந்த பட்டிலில் இப்போதும் நாங்களும். 

 இப்போது கடந்த 6 வருடமாக சென்னையில் சொந்தமாக தொழில் நிறைவான வாழ்க்கை சொந்தாக வீடு இப்போது சிறப்பாக நடைபெற இருக்கும் அண்ணன் திருமணம் என கடந்த 25 ஆண்டுகால கிராமத்து வாழ்க்கையில் எங்கள் அம்மா பட்ட கஷ்டங்கள் சிறதளவாவது குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  எத்தனை மகன்கள் அம்மாவை பாராட்டுகிறார்கள் பிடிவதாதம் செய்வதும் அதுசரியில்லை இது சரியில்லை  சண்டைபோட்டுவதும் எங்களை போன்ற மகன்களின் வேலையாக உள்ளது பண்டிகை நாட்களிலாவது  அவர்களை ஒரிரு வார்த்தைகளால் பாராட்டலாம் என்று இந்த கிராமத்து காக்கைக்கு தோன்றியது உங்களுக்கும் தோன்றினால் நலமே!