Pages

Thursday, July 28, 2011

என்னவள்

உன்னுடன் பேசியதை விட 
சண்டையிட்ட நாட்கள் தான் அதிகம்
உன் கண்கள் பேசியதை கூட 
ஏனோ வார்த்தைகளால் பேச மறுத்துவிட்டாய்
உன் மௌன சிரி்ப்பிலே 
என் வார்த்தைகளுக்கு பதில் கூறினாய்
இப்பொழுது ஏனோ விலகி விலகி செல்கிறாய் 
என் இதயம் பின்னோக்கிய உன் நினைகளுடன் 
சுற்றிகொண்டிருக்க
என் கண்கள் தினமும் உன்னை
தேடிக் கொண்டுதான் இருக்கிறது
ஒரு போதும் நீ என்னை கண்டுகொள்வதேயில்லை
உன் தொலைப்பேசியின் ஹலோ என்ற 
ஒற்றை குரலை கேட்டுகொண்டுதான் இருக்கிறேன்
உனக்கும் எனக்கும் மத்தியில் 
காலத்தின் சிறு இடைவெளி தான்
காத்திருப்பேன் உன் மௌன சிரிப்பிற்காகவே 
என்னவளே.........

3 comments:

M.R said...

ஊடல் காதல்.கவிதை அருமை

கூடல் பாலா said...

உண்மை காதலர்களுக்கு கவிதை எப்படி அருவியாய் கொட்டுகிறது பாருங்கள் ....

அம்பாளடியாள் said...

அருமையான அனுபவக் காதல்க் கவிதையோ!...
விரைந்து அந்த மௌனச் சிரிப்பு உங்கள் கண்களில்
தோன்றிட வாழ்த்துக்கள் சகோ....பகிர்வுக்கு மிக்க
நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களைக் கொடுங்கள்.

Post a Comment