Pages

Monday, June 27, 2011

ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் நடைபெற்ற அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற இலங்கையில் போரினால் உயிர் இழந்த ஈழத்தமிழர்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் மெழுகு ஏந்தி மௌன அஞ்சலி நடைபெற்றது ஏராளமான தோழர், தோழிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அமைதியாகவும் ஒரு புரிதல் உடனும் மிக சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து தமிழர்களின் விருப்பமான கொலைகார அரக்கன் ராஜபக்சே ஐ.நா சபை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முழக்கமாகவே இருந்தது. எங்களை போன்ற இளைய தமிழர்கள் நிறைய நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதும் முழக்கங்களை எழுப்பியதும் அனைவரும் குரல் கொடுத்ததும் தமிழர்களின் உண்மையான கோபமும், உணர்ச்சிகளும் வெளிப்பட்டது. மழை வரும் என்ற பயம் அங்கிருந்த அனைத்து தோழர்களுக்கும் ஏற்படவே செய்தது. ஆனால் வருணபகவான் தமிழர்களின் முழக்கங்களை கண்டு அஞ்சி விலகிப்போனது என்று கூறலாம். 
சுமார் 6.30 மணியளவில் சீமான் மற்றும் நெடுமறான் அய்யா  போன்றவர்களும் கலந்து கொண்டு முழகங்களும் அஞ்சலியும் செலுத்தினர்
 
பெரும்பாலான தோழர்கள் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அங்காங்கே கூடி முழக்கங்கள் மழை வரும் வரை நீடித்தது.

ஒவ்வொருவரின் கையிலும் ஏந்திய அந்த மெழுகு ஒளி நிச்சயம் விரைவில் ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஒளி வீசும் என்ற நம்பிக்யையுடன்.

அழிவான் அந்த அரக்கான்  ராஜபக்சே அன்று கொண்டாடுவோம் தீபாவளி இதே மெரினா கடற்கரையில்.

இந்திய அரசும் தமிழக அரசும் தலையிட்டு ஈழத்தமிழர்களின் அமைதியான வாழ்க்கை வாழ உதவிட வேண்டும் நம் உயிர்களை காத்திட வேண்டும் இதுவே அனைத்து தமிழர்களின் விருப்பம்.

உலகத்தமிழர்கள் ஒன்றுபடுவோம் அனைத்து தமிழர்களையும் 
ஓர் உயிராய் மதிப்போம்.........

3 comments:

கூடல் பாலா said...

தமிழர்கள் வாழ்வில் விரைவில் ஒளி பிறக்கட்டும் ....

சசிகுமார் said...

நண்பரே தாங்களும் வந்திருந்தீர்களா தொடர்பு கொண்டிருக்கலாம்....

Riyas said...

ஒற்றுமையே உயர்வு தரும்

Post a Comment