Pages

Sunday, June 26, 2011

ஜப்பானியர்களுக்கு உதவும் சூரியகாந்தி

ப்பான் நாட்டில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் தாக்கிய புகுஷிமா நகரில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தினால் அந்நகரில் அதிக அளவில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க பல்வேறு ஆய்வுகளும் நடவடிக்கைகளும் ஜப்பான் அரசு மேற்கொண்டுவருகிறது.
 
சூரியகாந்தி பூ உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் அணு கதிரியக்கம் படிந்த மண்ணை சுத்தபடுத்துவதற்கு இந்த பூச்செடிகள் உதவுகின்றன.

இதனால் அந்நாட்டில் மிக அதிகமாக  சூரியகாந்தி செடிகளை வளர்க்க பிரசாரம் செய்துவருகின்றனர். அந்நாட்டுஇளைஞர்கள் அனைவரும் சூரிய காந்தி செடிகளை பயிரிடுவதற்கு ஆர்வமாக இறங்கியுள்ளனர். 

சூரியகாந்தி செடிகளை நம்பிக்கையின் சின்னமாகவும் மறுகட்டமைப்பின் அடையாளமாகவும் ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
எவ்வளவு பேரழிப்பை கண்டபோதும் தங்களின் தன்னம்பிக்கையுடனும் முயற்சியுடனும் தங்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்றும் ஜப்பானிர்களின் மனோபக்குவம் மிக வியப்புக்குரியதே........

No comments:

Post a Comment