Pages

Tuesday, August 9, 2011

சமச்சீர் கல்வி வந்தாச்சு

சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறையில் 2 1/2 மாதமாக நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று தீர்வு ஏற்பட்டது.

ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது முதல் இதுவரை மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தை கற்று கொடுப்பது என்று தெரியாமல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சமச்சீர் புத்தகங்களை வினியோகம் செய்யும் பணியை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. அந்தந்த மாவட்ட மையங்களில் புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு வினியோகத்திற்கு தயாராக உள்ளன. 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உடனே பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து பேசுகிறேன். மாணவர்களுக்கு தாமதம் இல்லாமல் புத்தகங்கள் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். 10 நாட்களுக்குள் புத்தகம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருந்தாலும் அதற்கு முன்னதாகவே புத்தகங்களை வினியோகம் செய்து விடுவோம்.
 பல போரட்டத்திற்கு பிறகு சமச்சீர் கல்வி தழிழ்நாட்டில் அமல்பாடுத்தியாச்சு

எதற்காக இந்த  3மாதமாக மாணவர்கள அலைகழிப்பு செய்ய வேண்டும்.
பண விரயத்தையும் அரசாங்கத்தின் நேரத்தையும். நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடித்து. கல்வியையும் வேதனைப்படுத்தி ஒரு வழியாக
அரசியல்வாதிகளின் விளையாட்டு முடிவுக்கு வந்தது. இனிமேலாவது கல்வியின் பணி தடைபடாமல் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

6 comments:

Mohammed Nowshath said...

oru valiya kondu vanthutanga ! ! !

கூடல் பாலா said...

எப்படியோ ...இப்பவாவது பிரச்சனை தீந்துதே ...இனிமேலாவது பிரச்சினை இல்லாம இருக்கணும் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எதிர்ப்பார்த்த தீர்ப்பு...

பகிர்வுக்கு நன்றி...

Unknown said...

ஒரு மெகாத் தொடர் முடிந்தது!

புலவர் சா இராமாநுசம்

அம்பாளடியாள் said...

முயற்சி திருவினையாக்கும்.நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள் தோழி....

மாய உலகம் said...

எப்படியோ ஒரு நல்ல செய்தி வந்தடைந்த வரை சந்தோசம்... பகிர்வுக்கு நன்றி தோழி

Post a Comment