Pages

Sunday, March 3, 2013

சாரா - ரி்ச்சார்ட் ஒரு உண்மை காதல் கதை


காலைபொழுதின் அழுதத்தை  இரவுகள் நேரத்தில் புத்தகம் மற்றும் இசையின் மூலமாக என்னை புதுப்பித்து கொள்ளவதே என்னுடைய வாடிக்கை  

நேற்றைய இரவில்  fm Radio  சேனல் மாற்றிகொண்டு இருக்கையில் ஒரு சேனலில் ஒரு பெண் அழுதுக்கொண்டே தன்னுடைய காதல் கதையை  அந்த ரேடியோ ஜாக்கியிடம் (லவ் குரு) பகிர்ந்து கொண்டு இருக்கிறாள் அவள் பெயர் சாரா என்றும் அவளுடைய காதல் கணவன் பெயர் ரிச்சர்ட்  என்றும் அவளது உணர்வுபூர்வமான வார்த்தைகள் ஆரம்பிக்கிறது.

சாரா காதல் திருமணம் செய்து 5 மாதத்தில் பிரிவு. பிரிவை தாங்க முடியாத பெரும் துக்கம் அவளது வாழ்வில்.  பெங்களுரை பூர்விகமாக கொண்ட  ஒரு தமிழ்பெண் சிறந்த படிப்பு உயர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் சென்னையில் வேலை ரிச்சர்ட் அவளுடன்  பணிபுரிந்தவன் தன்னுடைய முதல் பார்வையில் அவளின் மீது காதல் கொண்டு தொடர்நது 6 மாதம் அவள் பின்னால் அலைந்து காதலுக்கு கீரின்  சிக்னல். என தன்னுடைய அற்புதமான காதல் கதையை சொல்லிக் கொண்டு இருக்கிறாள் சாரா  சிறந்த படிப்பறியுள்ள குடும்ப பிண்ணனி   நிறைவான வாழ்க்கை   காதலை பெற்றோரிடம் தெரிவித்து முதலில் சம்மந்தம்  வாங்கி தன்னை பெண் பார்க்க ரிச்சார்ட் குடும்பத்தை வர  வைத்துள்ளாள் இருவீட்டாரின் சம்மதத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடந்தேறியது.

     மருமகளாய் சென்னையில் ரிச்சார்ட் விட அதிக படிப்பு அதிக சம்பளம் என தன் சுய முயற்சியால் முன்னேற்றிக் கொண்டவள். அப்புறம் எப்படி  சார 5 வது மாதத்திலே டைவர்ஸ் வரைக்கும் கேட்க.  ஆமாம் லவ் குரு என் மாமியார் தான் எல்லாம் பிரச்சனைகளுக்கும் காரணம். எனக்கு கூட்டு  குடும்ப வாழ்ககை தான் பிடிக்கும் அப்படியே தான் அமைந்தது. இருவரும் அதே இடத்தில் தான் வேலை செய்து கொண்டு இருந்தோம் எனக்கு பல கனவுகள் media பணியற்ற  வேண்டும் என்பது அதற்கான முயற்சியும்  எடுத்தேன் ஆனால் என் மாமியார் இதெல்லாம் எங்க குடும்பத்திற்கு சரிவாரது நீ டி.வி யில் நடிப்பது  குடும்பத்திற்கு நல்லதல்ல என கனவுகளுக்கு  தடை போட்டார்கள். ரிச்சர்ட்டும்  அவர் அம்மாவின்  சொல்லுக்கு மட்டுமே தலையாட்டுகிறார். அவங்க சொன்ன நல்லது தான் சொல்லுவாங்க  கேளுன்னு சொல்லவார். எனக்கு ஒரு புரிதல் இருந்தது வேண்டாம் என்று வி்ட்டு வி்ட்டேன். வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கணவர்  மாமியார் சந்தோஷத்துடன் வாழ கூட ஆசைப்பட்டேன் ஆனால் அதிகப்படியான பிரச்சனைகள் என்னை வேலைக்கு போக வைத்தது  என்னுடைய   சேமிப்பு முழுவதையும்  என் கணவரின் குடும்பத்திற்காக செலவி்ட்டேன் பணம் ஒரு பெரியதாக நான் எப்போதும் நினைத்ததேயில்லை.  பல  தனிப்பட்ட ஆசைகளை கூட தியாகம் செய்தேன். 

Saturday, December 1, 2012

காக்கையின் கிராமம்


சென்னையிலிருந்து 150 கி.மி எங்கள் கிராமம் சென்னை வந்து 10 ஆண்டுகள் நெருங்கிவிட்டது.  படிப்படியாக என் கிராமத்து பயணமும் குறைந்து விட்டது. கடைசியாக உள்ளாட்சித்தேர்தல் ஓட்டு போட்டு  வந்த பிறகு இப்போது தான் போகும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் பொங்கலுக்கு போவோம் ஆனால் இந்த தடவை போக முடியுமா என்பது சந்தேகம் ஏற்பட ஒரு நிகழ்ச்சிகாக வந்தாவசி வரை சென்றோம் அங்கிருந்து 40 கி.மி தான் போக முடிவு செய்து 2வீலரில் பயணம் காலை 7.00 மணிக்கு கிளம்பி பைபாஸ் சாலையில வண்டி பறந்து கொண்டு காஞ்சிபுரம் அடைந்தது. அதற்கு பிறகு ஒற்றை வழிப்பாதை கிராமத்தின் சாரலில் பயணம் 5 கி.மி ஒரு கிராமம் என எங்களுடைய கிராமத்து நினைவுகளை  ஞாபகப்படுத்தியே வந்தது காலியான சாலைகள் சத்தம் இல்லாமல் டூவிலரில் ஒரு சுகமான பயணம் தான் கிராமத்தை நோக்கி நகரும் போது பரபரப்புகள் குறைந்து இயல்பான கிராமத்து தன்மைக்குள் புகுந்துவிடுகிறோம்.  



சில நாட்களுக்கு முன் பொய்த மழையால் எங்கும் பசுமையாக தான் இருக்கிறது நிலங்கள்.  அங்கங்கே இந்த சென்னை பண முதலைகள் சில இடங்களை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். 12 லிருந்து 15 மணி நேரம் மின்சாரம் இல்லை என்ன பண்ண முடியும் இந்த சிறு விவசாயி விளை நிலங்களை ரியல் அதிபர்களின் கைக்கு மாறுகிறது. நேரபரபரப்புக்குள் சிக்கி தவிக்காத கிராமத்து மக்களை பார்க்கும் பொழுது நிச்சயம் மனம் ஏங்கும்.  10 மணிக்கு வந்தவாசி அடைந்து நிகழ்ச்சி முடித்து விட்டு 1 மணிக்கு எங்கள் கிராமத்தை நோக்கி பயணம் ஆரம்பித்தது.
மூடு விழாவை ஏதிர்நோக்கியுள்ள நான் படித்த ஆரம்பபள்ளி

Sunday, November 11, 2012

கனவைத் தேடி



தன்னுடைய வாழ்நாள் கனவே ஒரு சிறந்த ஓவியன் ஆகனும் கனவு அதற்காகவே சிறு வயது முதலே  கனவுகளுடன் தன்னுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கினான் அந்த நண்பன். அதற்காகவே சிறந்த குருவை தேர்தெடுத்து அவரின் சீடனாக 10 ஆண்டுகள் தனது ஓவிய பயிற்சியையும் கனவையும் கற்றான். தன்னுடைய திறமையை நீருபிக்க வேண்டிய தருணம் வந்தது தனது 3 நாட்களாக வரைந்து அவனால் சிறந்து வெளிப்படாக நினைத்து வரைந்தான் அதை பரிசோதிக்க அவனுடைய பகுதியில் உள்ள தெருவில்  ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும்படி   வைத்து அருகே ஒரு பலகையில் நான் வரைந்த இந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள மையினால் கோடு போட்டு தவறை கூறுங்கள் என எழுதி வைத்து மிகவும் பாராட்டுகளை எதிர்பார்த்து இருந்தான்.

ஆனால் அவன் மாலையி்ல் வந்து பார்க்கும் போது படம் முழுவதும் தவறு தவறு என பெருக்கல் கோடு போட்டு  இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் எல்லாரும்  உன்னலாம் எவன்டா ஓவியன் சொன்னது என பல வாசகங்கள் வேறு மனம் உடைந்தான் நான் தோற்றுவிட்டேன் என அழுதான் என்னால் சிறந்த படைப்பை தரமுடியவி்ல்லை என வருந்தினான். தன் குருவிடம் நடந்தவற்றை கூறினான். அவர் வா அந்த படத்தை காட்டு அட போங்க குரு அதைவேற நீங்க பார்த்து  நீங்களும் ஏதாவது சொன்ன  என்னால தாங்கமுடியாது விடுங்க எனக்கு அவ்வளவு தான் போல என  வருந்தி கொண்டான். குருவிடாமல் போய் அந்த படத்தை பார்த்தார்  நல்ல  தாப்ப இருக்கு அருமையா பெயிண்ட் பண்ணீயிருக்க என கூறினார் அட போங்க குரு இந்த தெருவுல போனவங்க எல்லாம் குருடா என்ன என்று கூறினான். அதற்கு அந்த குரு சரி இதே ஓவியத்தை சிறிதும் மாறாமல் என்கிட்ட வரைந்து கொடு என்றார். எதற்கு குரு என்றான் நான் சொன்னதை செய் என்றார்.